திருமணத்திற்கு முன் அக்கம் பக்கம் வீடுகளிலோ, உறவினர் வீடுகளிலோ இருக்கும் சிறு குழந்தைகளை கொஞ்சுவதும், அதன் சேட்டைகளையும் , சிரிப்பையும் ரசிப்பது என்றாலும் அப்படி பிடிக்கும்.. நாள் முழுவதும் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டால் அதிலேயே முழு நாளும் நிறைவாய் கழியுமே என்ற ஆசையும் இருக்கும்.. ஒவ்வொரு நிமிடமும் குழந்தைகளின் சேட்டையை ரசித்துக் கொண்டிருக்கும் தாய் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று தோன்றும்..
இதை என் அம்மாவிடம் கூறும்போது, குழந்தை பிறந்ததும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வேலையும் வீட்டு வேலைகளுடன் சேரும்போது , யாராவது குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்க மாட்டாங்களா என்ற எண்ணம்தான் தோன்றும், நாள் முழுவதும் குழந்தையை ரசிக்க சூழல் இடம் தராது என சொல்வார்.. என்னால் அதை அப்போது ஏற்றுக் கொள்ள முடியாது..
எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னரும் அதனுடைய பூ போன்ற உடலை வருடி, நாளெல்லாம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண் குளிர கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆவல்.. ஆனால் பிறந்ததும் அவர்களுடைய முதல் இரண்டு வருடங்களுக்குண்டான வாழ்வில், அவர்களின் அத்தனை அழகிய குறும்புகளையும் இரசித்தேனா என்றால் பாதி கிணறு கூட தாண்டவில்லை என்ற அர்த்தம்தான் சொல்ல வேண்டி இருக்கும்.. எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும் நிலைதான்.. வீட்டு வேலைகள் , மற்ற வேலைகள் என சூழ்ந்து இருக்கும்போது குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது சிரமம்தான்.. அதிலும் நவீன தொலை தொடர்பு சாதனங்களுக்கு நம் நேரத்தை பங்கு கொடுக்கும் நிலைக்கு அதன் ஆளுமை வேறு இழுத்து வைத்துள்ளது.. என் அம்மாவின் வார்த்தைக்கு நானே உதாரணமாகியும் போனேன்..
இரு குழந்தைகளுக்கும் வயது இடைவெளி குறைவு என்பதால் இரண்டாவது குழந்தையின் வளர்ச்சியையும் அணு அணுவாக ரசிக்க முடியவில்லை.. அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது..
சரி இப்போதும் சிறு குழந்தைகள்தானே என்ற என் நினைப்பும் உங்கள் நினைப்பும் அவர்களின் பேச்சை கேட்டால் தன் வாயை மூடிக் கொள்ளும்..
எடுத்துக்காட்டு இதோ - கேஜி 1 படிக்கும் மகனிடம் "ஸ்கூல்-க்கு இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் வைக்கிறது" என கேட்க , அதை நான் சொல்ல மாட்டேன் , நீதான் வைக்கணும்" என கூறவே , "நான் வைக்கிறேன் , இன்னைக்கும் பாக்ஸ்-ல மீதம் வச்சுட்டு வந்தேன்னா பார்த்துக்கறேன்" என நான் கோபத்துடன் கூறினேன்.. அடுத்த நொடியே அவன் , நான் திரும்ப கொண்டு வராத மாதிரி நீ வைக்கணும்" என சொல்கிறான்.. "சரி, அப்போ என்ன வைக்க" என முதல் கேள்விக்கே திரும்ப போனால் அந்த முதல் பதிலையேதான் அவன் வாயில் வைத்திருக்கிறான்....இப்படி பேசினா, என்னதான் பண்ண முடியும்!!!!!
இளையவளோ அவனின் வாயை விட இரு மடங்கு நீளம் கூட்டி வாங்கி வந்திருக்கிறாள்.. என்ன சொன்னாலும் நாமே எதிர்பார்க்காத பதில்கள் வந்து நம்மை வந்து தாக்கும்... அவளுக்கு அப்பா என்றால் உயிர்.. என்னிடம் சில நேரம் காட்டும் கோபத்தையும், பிடிவாதத்தையும் மருந்துக்கும் கூட அவள் அப்பாவிடம் காட்ட மாட்டாள்.. சில நேரம் கையில் உள்ளதை கோபத்தில் என் மீது வீசி எறிவாள்.. இது போல அப்பாகிட்ட நடப்பியா, என கோபமாக கேட்டால் உடனே "அப்பாவுக்கு வலிக்கும்" என பதில் வரும்.. "அம்மாவுக்கு வலிக்காதா" என கேட்டால் "வலிக்கட்டும்" என ஒற்றை சொல்லை அலட்சியமாக வீசி விட்டு நிற்பாள்.. இது போல் அல்லாது பல அழகிய மலைக்க வைக்கும் பேச்சுகளும் அவளிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்..
இப்போதே குழந்தைத்தனம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பருவமோ என யோசிக்கும் அதே வேளையில் இந்த காலத்தில் இதுதான் குழந்தைத்தனம் என என் மனதை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தி அவர்களின் குறு(கரு)ம்பான பேச்சுகளை என்னை மறந்து ரசித்து வருகிறேன்...
இதை என் அம்மாவிடம் கூறும்போது, குழந்தை பிறந்ததும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வேலையும் வீட்டு வேலைகளுடன் சேரும்போது , யாராவது குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்க மாட்டாங்களா என்ற எண்ணம்தான் தோன்றும், நாள் முழுவதும் குழந்தையை ரசிக்க சூழல் இடம் தராது என சொல்வார்.. என்னால் அதை அப்போது ஏற்றுக் கொள்ள முடியாது..
எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னரும் அதனுடைய பூ போன்ற உடலை வருடி, நாளெல்லாம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண் குளிர கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆவல்.. ஆனால் பிறந்ததும் அவர்களுடைய முதல் இரண்டு வருடங்களுக்குண்டான வாழ்வில், அவர்களின் அத்தனை அழகிய குறும்புகளையும் இரசித்தேனா என்றால் பாதி கிணறு கூட தாண்டவில்லை என்ற அர்த்தம்தான் சொல்ல வேண்டி இருக்கும்.. எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும் நிலைதான்.. வீட்டு வேலைகள் , மற்ற வேலைகள் என சூழ்ந்து இருக்கும்போது குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது சிரமம்தான்.. அதிலும் நவீன தொலை தொடர்பு சாதனங்களுக்கு நம் நேரத்தை பங்கு கொடுக்கும் நிலைக்கு அதன் ஆளுமை வேறு இழுத்து வைத்துள்ளது.. என் அம்மாவின் வார்த்தைக்கு நானே உதாரணமாகியும் போனேன்..
இரு குழந்தைகளுக்கும் வயது இடைவெளி குறைவு என்பதால் இரண்டாவது குழந்தையின் வளர்ச்சியையும் அணு அணுவாக ரசிக்க முடியவில்லை.. அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது..
சரி இப்போதும் சிறு குழந்தைகள்தானே என்ற என் நினைப்பும் உங்கள் நினைப்பும் அவர்களின் பேச்சை கேட்டால் தன் வாயை மூடிக் கொள்ளும்..
எடுத்துக்காட்டு இதோ - கேஜி 1 படிக்கும் மகனிடம் "ஸ்கூல்-க்கு இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் வைக்கிறது" என கேட்க , அதை நான் சொல்ல மாட்டேன் , நீதான் வைக்கணும்" என கூறவே , "நான் வைக்கிறேன் , இன்னைக்கும் பாக்ஸ்-ல மீதம் வச்சுட்டு வந்தேன்னா பார்த்துக்கறேன்" என நான் கோபத்துடன் கூறினேன்.. அடுத்த நொடியே அவன் , நான் திரும்ப கொண்டு வராத மாதிரி நீ வைக்கணும்" என சொல்கிறான்.. "சரி, அப்போ என்ன வைக்க" என முதல் கேள்விக்கே திரும்ப போனால் அந்த முதல் பதிலையேதான் அவன் வாயில் வைத்திருக்கிறான்....இப்படி பேசினா, என்னதான் பண்ண முடியும்!!!!!
இளையவளோ அவனின் வாயை விட இரு மடங்கு நீளம் கூட்டி வாங்கி வந்திருக்கிறாள்.. என்ன சொன்னாலும் நாமே எதிர்பார்க்காத பதில்கள் வந்து நம்மை வந்து தாக்கும்... அவளுக்கு அப்பா என்றால் உயிர்.. என்னிடம் சில நேரம் காட்டும் கோபத்தையும், பிடிவாதத்தையும் மருந்துக்கும் கூட அவள் அப்பாவிடம் காட்ட மாட்டாள்.. சில நேரம் கையில் உள்ளதை கோபத்தில் என் மீது வீசி எறிவாள்.. இது போல அப்பாகிட்ட நடப்பியா, என கோபமாக கேட்டால் உடனே "அப்பாவுக்கு வலிக்கும்" என பதில் வரும்.. "அம்மாவுக்கு வலிக்காதா" என கேட்டால் "வலிக்கட்டும்" என ஒற்றை சொல்லை அலட்சியமாக வீசி விட்டு நிற்பாள்.. இது போல் அல்லாது பல அழகிய மலைக்க வைக்கும் பேச்சுகளும் அவளிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்..
இப்போதே குழந்தைத்தனம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பருவமோ என யோசிக்கும் அதே வேளையில் இந்த காலத்தில் இதுதான் குழந்தைத்தனம் என என் மனதை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தி அவர்களின் குறு(கரு)ம்பான பேச்சுகளை என்னை மறந்து ரசித்து வருகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.