அப்பல்லோ-வில் ஜெ.வின் உடல்நிலை நிலவரத்தை சசிகலா மறைத்தது , ஜெ. வின் மரணத்தின்போது ஜெ.வால் வெளியே விரட்டப்பட்டவர்கள் அவர் உடலை சூழ இருந்தது , அதை பார்த்துக்கொண்டு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்பாமல் இருந்தது போன்றவைகளை பார்த்து கோபம் , விரக்தி , நம்பிக்கையான தலைமையின்மை என்ற பல சூழலில் சிக்கித் தவித்தார்கள் அதிமுகவின் உண்மை தொண்டர்கள்..
தலைமையை இழந்து , நம்பிக்கையான தலைமை கிடைக்குமா என தொண்டர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான் , சசிகலாவை எதிர்த்துக் கொண்டிருந்த தீபாவை தன் தலைமையாகஏற்க முடிவெடுத்தார்கள்..
சசிகலாவால் ஜெ.இறுதி சடங்கின் போதும் கூட விரட்டப்பட்டதும் , ஜெ. மறைவின் போது நிருபர்கள் அரசியலுக்கு வருவீர்களா என தீபாவிடம் கேட்ட கேள்விக்கு தீபா தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாக கூறியதும், ஜெ.வின் அண்ணன் மகள் என்பதும் , மக்கள் வெறுத்த சசிகலா கூட்டத்தை எதிர்த்ததும் , முக்கியமாக அடிமட்ட தொண்டர்களின் கருத்துப்படி ஜெ.வின் சாயலிலேயே இருந்ததும் என தீபாவை தொண்டர்கள் ஏற்க பல காரணங்கள் இருந்தன..
அரசியலுக்கு வருவேன், எப்படி என பின்னால் அறிவிப்பேன் எனக் கூறி வந்தவர் தன் முடிவை சொல்வதற்கு இறுதி நாளாக ஜெ.வின் பிறந்தநாளைக் கூறினார்.. இடையில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து அதே நாளில் ஓபிஎஸ்-உடன் ஜெ.நினைவிடத்துக்கு வந்து இன்றிலிருந்து தன் அரசியல் பயணம் போவதாக அறிவித்தார்..
இது எல்லாம் எல்லோரும் அறிந்த விஷயம்..
தீபா அரசியலுக்கு வர தகுதியானவரா? உண்மையிலேயே அவர் சொல்வது போல் ஜெ.விற்கு எதிரானவர்களை துரத்திவிட்டு நல்ல ஆட்சி கொடுக்கத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறாரா?
ஆரம்பத்தில் ஜெ.வின் அண்ணன் மகள் என்ற காரணத்துக்காகவும் , உருவ ஒற்றுமையின் காரணத்துக்காகவும் தொண்டர்கள் அவரை தேர்ந்தெடுத்த போது பொதுமக்கள் பலருக்கு பிடிக்கவில்லை.. ஆனால் எம்ஜிஆர் ஆரம்பித்து இதுநாள் வரை ஜெ. வழி நடத்தி வந்த அதிமுக என்னும் பெரிய கட்சி சசிகலா அன்ட் கோ.வால் அழியும் என்ற நிலை வந்த போது தொண்டர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை பிடிப்பான தீபாவை பொதுமக்கள் சிலரும் ஆதரித்தார்கள்..
ஆனால் அதன் பின்னான அவரின் அரசியல் நடவடிக்கைகளில் வேகம் இல்லை.. ஜெ.வின் பிறந்தநாளுக்கு பிறகுதானே தன் கருத்தை சொல்லப் போகிறார் என்பதால் அவரின் அசாதாரண வேகக் குறைவை யாரும் பொருட்படுத்தவில்லை .. ஆனால் அவர் பெயரில் தொடங்கப்பட்ட பேரவை மூலம் தொண்டர்கள் பல கூட்டங்களை கூட்டி வந்தனர்.. ஓபிஎஸ்-உடன் இணைந்து அதிமுகவின் இரு கரங்களாக செயல் படுவோம் எனக் கூறியவரின் நடவடிக்கைகள் அதன் பின்னான நாட்களிலும் பெரிதாக இல்லை.. இந்நிலையில் புது கட்சி அறிவிப்பு..
இடையில் அவர் அரசியல் செய்வதற்கு பல பிரச்சனைகள் தமிழகத்தில் எழுந்தன.. ஆனால் அதற்காக அவர் பெரிய அளவுக்கு பரபரப்பாக அறிக்கை கூட விடவில்லை.. பொது பிரச்சனைகளை விடுங்கள்.. ஜெ.வின் மர்ம மரணம் குறித்த அப்பல்லோ முன்னாள் பெண் மருத்துவரின் சாட்சி தீபா பேரவை மூலமே வெளியே கொண்டு வரப்பட்டது..
ஜெ.வுக்கு ரத்த சம்பந்தமில்லாத பல கோடி மக்கள் அவர் மரணத்தின் மர்மம் குறித்து அறிய முனையும் போதும், வெளிவரும் தகவல்களைக் கண்டு உணர்ச்சி வசப்படுதல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதும், ரத்த சம்பந்தமுள்ள ஒருவர் , அதுவும் ஜெ.வின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் ஒருவர் அந்த சாட்சியை கொண்டு அரசியலுக்காகவேனும் பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்திருக்க வேண்டுமே..
ஜெ.வின் பெயர் கொண்டு அரசியலுக்கு வரும் ஒருவர் , தனக்கு ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்றாலும் அக்கட்சி தொண்டர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் விசாரணைகளை வேண்டி முதன் முதலாக கொடுத்திருக்க வேண்டுமே..
மட்டுமல்ல , ஜெ.வின் தோழி ஜெ, மர்ம மரணம் குறித்து கொடுத்த வழக்கையும் ,சின்ன அத்தை(சசிகலா ) மேல் கொடுத்த வழக்கை வாபஸ் பெற கூறியதாகவும் ஜெ.வின் தோழி கீதாவே கூறி இருக்கிறாரே..( இணைப்பு : முதல் கம்மெண்ட்டில் )
மேலும், அவருக்கு எதிலும் நிலையான புத்தி இல்லை என்றும் கூறி இருக்கிறார்.. அது இந்த இரண்டரை மாத காலத்தில் அவரின் பல அரசியல் நிலையில்லாபாட்டில் உறுதியாகியுள்ளது..
அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் வெளியே வந்ததும் தீபாவுக்கிருந்த பெரும் மக்கள் செல்வாக்கு கொஞ்சம் குறைந்திருக்கிறது.. இனி தனி கட்சி தொடங்குவதாக கூறி இருப்பினும் அதிமுக அழியக்கூடாது என நினைக்கும் பல தொண்டர்களின் மத்தியில் இது வரவேற்பை பெறாது .. அவர்கள் அதிமுகவை காக்க ஓபிஎஸ் வந்ததாகவே கருதுகிறார்கள்.. அதிமுகவிலேயே தீபாவும் இணைந்திருக்க விரும்புகிறார்கள்..
அவர் அரசியலுக்கு வந்ததே ஜெ.. வழிநடத்திய அதிமுகவை வளர்ப்பேன் எனக்கூறிதான்.. அதை விடுத்து தனி கட்சி ஆரம்பிப்பதாக கூறி இருப்பது , அதிமுகவை , ஜெ.வின் தனக்கு பின்னும் நூறாண்டு அதிமுக இருக்கும் என்ற சூளுரையை புறக்கணித்து தனக்கிருந்த அரசியல் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. (அவருக்கு சிறுவயதிலிருந்தே அரசியல் ஆசை இருந்ததை அவரே பேட்டிகளில் கூறி இருக்கிறார்..)
எப்படியோ அவரின் மன விருப்பப்படி ஜெ.வின் மறைவு அவரை எந்த போராட்டமுமின்றி மக்களின் மூலமாகவே அரசியலுக்கு வரவழைத்து விட்டது.. இதற்கு மேல் அவர் அரசியலில் தாக்கு பிடிக்க வேண்டுமென்றால் கள பிரச்சாரம் , சூடான , உண்மையான அரசியல் பேச்சுகள் , மக்களுக்கான போராட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்க வேண்டும்..
இப்போது போல நமக்குத்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே , அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என நினைத்துக் கொண்டு ஆறிப்போன நேரத்தில் பேட்டிகளை மட்டும் கொடுத்தால் , மக்கள் ஆதரவு தனக்கிருக்கிறது என நம்பி வந்து, அரசியலில் காணாமல் போன பிரபல முகங்கள் போல இவரும் காணாமல் போய் விடுவார்..
23-2-2017