வெந்நீர் குளியல் முடித்ததும்
நீராவியால் சூழ்ந்திருக்கும்
கண்ணாடியை
சில வார்த்தைகளை நிரப்பி
மீட்டெடுப்பது அவள் வழக்கம் .....
சில நாட்கள்
அவள் விரல்களுக்கு
பழகிப்போன
அகன்ற கண்கள் கொண்ட
பெண் முகம்
ஓவியமாய் மிளிரும்...
சில நாட்கள்
கடவுளின் பெயரால்
கண்ணாடி தன்னிலை
படுத்தப்பட்டிருக்கும் .....
சில நாட்கள்
எங்களிருவரின் பெயர்களுக்கு
நடுவில் இதயக்குறி
கண் சிமிட்டும்.....
சில நாட்களோ
எங்கள் குடும்பத்தின்
அத்தனை பெயர்களும்
இணைந்து நீராவியை
விலக்கி விட்டிருக்கும் ....
ஏதேதோ சிந்தனைகளும்
அவசரமும்
அவள் விரல்களை
கட்டிப் போட்டிருப்பதை
ஏதும் எழுதப்படாத
வெற்று கண்ணாடி
நாட்கள் உணர்த்தும்......
இத்தனை இருந்தும்
உணர்ச்சிகளை குளியல்
மனதிலிருந்தும்
கழுவி விடுவதாலோ என்னவோ
குளியலுக்கு முந்தைய
உணர்வுப் பிழம்பான
வார்த்தைகளை மட்டும்
ஒருநாளும் தன்மேல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.