"ஒரு ஊர்ல ஒரு சோம்பலான மனுஷன் இருந்தானாம் .. அவனுக்கு ரொம்ப பணக்கஷ்டமாம் .. சாப்பிட சாப்பாடு இல்ல, போட்டுக்க துணியில்ல ,அந்த அளவுக்கு ரொம்ப வறுமைல இருந்தானாம்"...
"ஏன் சாப்பாடு இல்ல, டிரஸ் இல்ல" வறுமைனா என்ன"- ரோஹித்
"வேலைக்கு போனாதான காசு கிடைக்கும்.. அந்த காசுலதான சாமான்லாம் வாங்கி சமைக்க முடியும். துணி வாங்க முடியும்.. அந்தமாதிரி வாங்க முடியதவங்கள வறுமைல இருக்கறதா சொல்வாங்க. அந்த ஆள் வேலைக்கு போகாம சோம்பேறியா உட்கார்ந்துட்டு இருந்தா யார் பணம் கொடுப்பாங்க.. அப்பா வேலைக்கு போறதாலதான சம்பளம் கொடுக்கறாங்க.. நாம எல்லாம் வாங்கிக்கறோம்"
ம்ம்.. அப்பா வேலைக்கு போறதால காசு கொடுக்கறாங்க.. நான் ஸ்கூலுக்கு போறேன் , ஆனா எனக்கு யாருமே(வார்த்தையில் அழுத்தம் கொடுத்து )காசு தர மாட்டேங்கிறாங்க"
வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு "நீ பெருசாகி வேலைக்கு போகும்போது உனக்கும் சம்பளம் தருவாங்க.. அப்புறம் அந்த ஆள் ஒரு சாமியாரை பார்க்க போய் , எனக்கு நிறைய பணம் வேணும், என் கஷ்டமெல்லாம் தீரணும்,அதுக்கு வழி சொல்லுங்கன்னு கேட்டாராம்".. சாமியாருக்கு அவன் வேலைக்கு போகாத சோம்பேறின்னு தெரிஞ்சுடுச்சு.. அதனால அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நினச்சுட்டு ஒரு கதை சொல்றேன்னு சொன்னாராம்..
"சாமி பேசுமா, நான் கும்பிடும்போது பேசமட்டேங்குது"
சாமி பேசாது , சாமியார் பேசுவார், முன்னாடி எல்லாம் பெரிய தாடி வச்சுட்டு சாமியாரெல்லாம் இருப்பாங்க.. இப்ப உள்ள சாமியார்க எல்லாம்..(மேல என்ன சொல்றதுன்னு தெரியாததால அதோட விட்டுட்டேன்) அவங்ககிட்ட போய் கஷ்டம்னு சொன்னா, அது தீர நமக்கு ஏதாவது வழி சொல்லுவாங்க.. சரி , இப்ப அந்த சாமியார் அந்த ஆளுக்கு ஒரு கதை சொல்றாராம்"..
ஒரு மரங்கொத்தி ஒரு மரத்தை போட்டு டொக்கு டொக்குன்னு தன் அலகாலா, அலகுன்னா அதோட வாய்.., அதால கொட்டிட்டே இருந்ததாம்.. அப்போ அந்த வழியா வந்த ஒரு ஆள் , சும்மா , டொக்கு டொக்குன்னு கொட்டிட்டே இருக்கியே , இது வீண் வேலைதானேன்னு கேட்டாராம்.."
"அதுக்கு அந்த மரங்கொத்தி சொல்லுச்சாம், மனுஷனே , நான் எனக்கு சாப்பாடு தேடறேன்.. தேடினாத்தான கிடைக்கும்னு சொல்லுச்சாம்".. அப்புறம் அந்த ஆள் பார்த்துட்டு இருக்கும்போதே மரத்தை கொத்தி ஓட்டை போட்டு அதுக்குள்ள பதுங்கி இருந்த புழுக்களையெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சுதாம்..
"ஐயே, நானெல்லாம் சோறுதான் சாப்பிடுவேன், அது சோறு சாப்பிடாதா?"
அது எப்படி அரிசி வாங்கி சமைச்சு சாப்பிடும். நான் நேத்து சிங்கக் கதை சொல்லும்போது சிங்கமெல்லாம் ஆடு, மாடு , மான் எல்லாத்தையும் கொன்னு சாப்பிடும்னு சொன்னேன்ல, அது போல Birds எல்லாம் புழு, பூச்சி , வெளிய சிந்தி இருக்க Grains எல்லாம்தான் சாப்பிடும்..
"அதோட வயிறு நிறையற வரை சாப்பிட்ட மரங்கொத்தி அந்த மனுஷன்கிட்ட சொல்லுச்சாம், மனுஷனே நீயும் போய் உனக்கு தேவையானதா எல்லா பக்கமும் தேடு.. தேடினாத்தான் கிடைக்கும்னு சொல்லுச்சாம்.. அப்புறம் அந்த சாமியார், அந்த சோம்பேறி மனுஷன்கிட்ட சொன்னாராம், நீயும் போய் வேலை தேடு, தேடினாத்தான் உன் வறுமை போகும்னு சொன்னாராம்.. அதை கேட்டுட்டு அந்த மனுஷனும் சரி ன்னு சொல்லி போயிட்டானாம்.."
"இந்த கதை என்ன சொல்லுதுன்னா , தேடுனாதான் எல்லாமே கிடைக்கும்.. சோம்பேறியா இருந்தா எதுவும் கிடைக்காது.. நீயும் நல்லா தேடி தேடி படிக்கணும்.. அப்புறம் படிச்சு முடிச்சு வேலைக்கு போனாதான் நல்லா இருக்க முடியும்.. ஒகே வா?"
"ஒகே ம்மா.. இப்ப KG 1 படிச்சு முடுச்சுருவேன்ல.. அப்புறம் வேலைக்கு போய் நிறைய காசு வாங்கி எல்லாம் வாங்குவேன்..அப்பாக்கு நான் நிறைய காசு கொடுப்பேன்.. "
" இல்லடா, -----"
"-------"
"--------"
"-------"
----XXXXX----
ம்ம்.. குழந்தைககிட்ட ஒரு சின்ன கதைய சொல்லப்போனா எவ்வளவு நேரம் எடுத்துக்குது பார்த்தீங்களா...
"--------"
"-------"
----XXXXX----
ம்ம்.. குழந்தைககிட்ட ஒரு சின்ன கதைய சொல்லப்போனா எவ்வளவு நேரம் எடுத்துக்குது பார்த்தீங்களா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.