ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் நிகிதாவுக்கு "living things , non living things பற்றிய வீட்டுப்பாடம்.. ஒருமுறை விளக்கியவுடன், "நம்ம வீட்ல உள்ள லிவிங் தாங்ஸ் எல்லாம் காமி" எனக் கேட்க , என்னை, மாமாவை, தாத்தாவை, பாட்டியை, அண்ணனை எனக் கை காட்டியவள் , பின் கட்டிலுக்கு அடியில் , மேஜைக்கு அடியில் , சுவற்றில் என நோட்டம் வீட்டுக்கு கொண்டிருந்தாள்..
அந்த அறையில் ஏதும் அவள் பார்வைக்கு தட்டுப்படாததால் அடுத்த அறைக்கு ஓடினாள்.. உடனே நான் " இன்செக்ட்ஸ் கிடைக்காட்டி , பரவால்ல, இங்க வா " என கூற , அங்கிருந்து சிரித்தபடி ஓடி வந்தவள் "சாமி போட்டோ" என்றாள்.. "சாமி போட்டோவா" என நான் புரிந்து சிரிக்க தொடங்கவும் "ஆமாம், சாமி, நாம கேட்டதெல்லாம் கொடுக்குதுல்ல " என கூறினாள்..
"அம்மா, சாமிதான் லிவிங் திங் , சாமி போட்டோ நான் லிவிங் திங் தான" என ரோஹித் கேட்க , சில நொடிகள் சிந்தனைக்கு பின் "ஆமாம்" என குழப்பத்துடன் கூறி முடித்தேன்..
நேற்று ரோஹித்தின் பாடநூலின் படி, "அம்மா, அப்பா, சிஸ்டர், பிரதர், க்ராண்ட்ப்பா, க்ராண்ட்மா அண்ட் டீச்சர் இவங்கதான் நம்மை பாதுகாக்கும் வளையத்தில் இருக்காங்க என கேள்விக்கான பதிலை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.. உடனே நிகிதா, "நீ, ஒருத்தங்களை மறந்துட்ட" என சொல்ல , "மாமாவையா, சித்தப்பாவையா" என ரோஹித் கேட்டான். நானும் , அம்மாவும், " நீ சாமியதான சொல்ற " எனக் கேட்டோம்.
"அவங்க பேர் மறந்துடுச்சு" என தடுமாறியவள் ,பின் "அவங்க பெரிய கன் வச்சுருப்பாங்க" எனக் கூறினாள்..
சில தினங்களுக்கு முன்தான் பிள்ளைகளுக்கு ராணுவ வீரர்கள் பற்றி கூறியிருந்தேன்.. நேற்றைய சூழ்நிலையில் ,உடனே அது அவள் மனதுக்குள் வந்தது , ஆச்சரியத்தோடு பிரமிப்பை கொடுத்தது..
இம்முறை "ஆமாம்" என குழப்பமில்லாமல் கூறினேன்..
22 -7 -2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.