புறக்கணிப்புகள்
மிகுவலி தருபவை..
புறக்கணிப்புகள்
நம் நிலையை
தாழ்த்தி எண்ண வைப்பவை...
ஒரு சுடுசொல்லை
வாங்கும் கணத்தை விட
ஒரு புறக்கணிப்பை
எதிர்கொள்ளும் கணத்தின்
கனம் அதிகம்...
புறக்கணிப்புகளுக்கு
ஆதியிலிருந்தே
அவளை பிடிக்கும்...
அவளால்தான் தான் ஏனோ
அதனுடன் இன்னும்
பழக்கப்பட இயலவில்லை..
புறக்கணிப்பு நிகழ்த்தும்
மனிதர்களை
அவள் அன்றாடங்களிலிருந்து
நீக்க முயல்கிறாள்...
முயற்சியில் வெற்றி கண்டாலும்
புறக்கணிப்புகள்
அவளையே தொடர்கின்றன
வெவ்வேறு ரூபங்களில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.