செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

தொலைந்த சூழல்

ஒரு பெருமழை நாளில்
முன்திட்டில் அமர்ந்து
மாமரக் கிளைகளின் வழி
மண்ணைத் துளைத்து
வாசத்தைக் கிளப்பிய மழையை 
ரசித்துக் கொண்டிருந்தேன்..
மனம் லயித்துப்போன நேரத்தில்
துளிகளை உதிர விட்டுக்
கொண்டிருந்த சில மாவிலைகளையும்
பாதியளவு இடத்தை மட்டும் நனையக்
கொடுத்திருந்த திண்ணையையும்
மழையில் குளித்துக் கொண்டிருந்த
முன் வீட்டு ஓடுகளையும்
அந்நாளுக்கு சாட்சியாக்கினேன்...
கால ஓட்டத்தில் திண்ணை
இல்லாமலே போயிருந்தது
ஓட்டுக்கூரையோ சிமெண்ட் கூரை
வரவால் காணாமல் போயிருந்தது.
மீதம் இருந்த சாட்சிகளை
தாங்கிக் கொண்டிருந்த
மாமரத்தின் அடியில்
நின்று தேடிக் கொண்டிருக்கிறேன்
அந்த மாவிலைகளை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.