இந்த தீபாவளி, என் தாய் வீட்டில் கொண்டாட முடியலையே என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்து, நல்ல படியாக கடந்தது... தீபாவளிக்கு முன்னாடி நாள் (அவருக்கும் லீவ்) பலகாரம் சுட ஆரம்பிச்சன்.. அச்சு முறுக்கு சுடத்தான் ரொம்ப நேரம் (சுமார் 6 மணி நேரம்) எடுத்தது... அப்புறம் தேங்காய் பர்பி, ரவா லட்டு-ன்னு சீக்கிரம் வேலை முடிஞ்சது... அடுத்த நாள் என் கணவரின் விருப்பத்திற்காக போளி.... (பலகார லிஸ்ட் முடிஞ்சது...முதன் முதலா ...தீபாவளிக்கு என்று நான் பலகாரம் செய்தது இந்த தீபாவளிதான்..- ஆனால் காரமா எதுவும் செய்ய நேரம் இல்லாததால மிக்சர் மட்டும் கடையில் வாங்கிட்டோம்..) ரொம்ப தாமதமா (10 மணி)எழுந்த குழந்தைகளை (முந்தின நாள் பலகாரம் செய்யும்போது கூட இருந்ததால்) எண்ணெய் வைத்து குளிப்பாட்டி , புது துணி உடுத்தி நண்பர்கள் வீட்டுக்கு பலகாரம் கொடுக்கவும் அனுப்பி வைத்து..அடடா ஒரு தீபாவளி எபெக்ட் வந்துருச்சு.. (முக்கியமா அடுத்த நாள் நான் பலகாரம் கொடுத்தனுப்பிய நண்பர்கள் வீட்டிலிருந்து போன் செய்து எல்லாம் நன்றாக இருந்தது என்று சொன்னது அதிக நேரம் எடுத்து செய்த போது இருந்த களைப்பை எல்லாம் மறைக்க வைப்பதாக இருந்தது...)எங்கள் வீட்டுக்கு பலகாரம் கொடுக்க குடும்பத்துடம் வந்த நண்பர்கள் மூலம் அந்த நாள் மேலும் அழகாகியது... வீட்டில் கட்டி விடுவதற்காக அவர் வாங்கிய இரு பெரிய பலூன்களில் ஒன்று அவர் ஊத ஊத வெடித்ததில்(என்னா சத்தம் தெரியுமா) பட்டாசு வெடித்த திருப்தியும் கிடைத்தது... grin emoticon ஹஹாஹா.. மதியம் நண்பர்களுடன் இங்குள்ள சிவஸ்டார் உணவகத்தில் உணவு..... இரவு நண்பர்களுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பார்க்க (படம் கொஞ்சம் மொக்கைதான், இருந்தாலும் வெளியே சென்று பார்த்த திருப்தி ) சென்றிருந்தோம்.. ஆக இந்த தீபாவளி என் கடந்த தீபாவளிகளுக்கு சிறிதும் குறைவிலாமல் கொண்டாட்டத்துடன் இனிமையாக முடிந்தது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.