குழந்தைகளுக்கு ஒரு கட்டத்துல அம்மாக்கு ஒன்னுமே தெரியாதுன்ற எண்ணம் வர ஆரம்பிக்கும்.. பார்த்தீங்களா, இதுல முதல்ல பலிகடா ஆகறது பாவப்பட்ட அம்மாக்கள்தான்..சில வருடங்கள் கழித்து அப்பாக்கு ஒன்னுமே தெரியாது-ன்ற எண்ணமும் சேர்ந்துடும், சில வருடங்களுக்கு பிறகு ஆசிரியர்களும், அதன் பின்னால் எல்லோருமே அதில் சேர்ந்து,தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்ங்கிற மனோநிலை வர ஆரம்பிக்கும்..
இதெல்லாம் தெளியறதுக்கே ஒரு குறிப்பிட்ட வயசும் அனுபவமும் வர வேண்டி இருக்கும்.. நாமெல்லாம் அப்படி தெளிஞ்சு வந்தவங்கதானே..
இப்ப என் பையன் அதுல முதல் படி ஏறி இருக்கான்.. ஆனால் அவன் மனசுல என் அறிவு எவ்வளவு படி கீழ இறங்கி இருக்குன்னு பாருங்களேன்..
ஒரு வாரத்துக்கு முன்ன , ஸ்கூல் ல இருந்து பேமிலி போட்டோ கேட்டு அனுப்பி இருந்தாங்க.. அடுத்த நாள் கொடுத்து அனுப்பினேன்.. அப்புறம் அடுத்த இரண்டு நாளுக்குள்ள , ஞாயிற்றுக்கிழமை கிளாஸ்-ல க்ரூப் போட்டோ எடுக்கப் போறதாவும் , போட்டோ காப்பி தேவைனா 15 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கிக்கலாம்னும் டைரி-ல ஒட்டி அனுப்பி இருந்தாங்க..
அன்னைக்கு வியாழக்கிழமை, அன்னைக்கே பணத்தை எடுத்து டைரி ல வச்சு, மறக்காம மேடம்கிட்ட கொடுத்துடுன்னு சொன்னேன்.. வெள்ளி , சனி விடுமுறை..
ஞாயிறு காலையில் அவன் எழுந்து வரும்போதே டைரியில் இருக்கும் பணத்தை நினைவு படுத்தினேன்.. "சரி" என்றவன் அவன் அப்பா குளிப்பாட்டி விட்டதும், நான் தோசை ஊட்டுவதற்காகக் காத்திருந்தான்..
கிச்சனில் அவனுக்கு தோசை எடுத்துக் கொண்டிருக்கும்போது , ஹாலில் இருந்து "அம்மா , இப்ப காசு கொடுத்துருக்கே இல்ல, இது இன்னைக்கு ஸ்கூல்ல எடுக்கப்போற போட்டோ வாங்கறதுக்குத்தான், அன்னைக்கு நீ கொடுத்த போட்டோ குடுப்பாங்கன்னு நினச்சுட்டு இருக்காதம்மா"ன்னு சீரியஸா சொல்றான்..
"டேய்" னு நான் பாயப்போக அவன் அப்பா சிரிச்சுகிட்டே அவனுக்கு கை கொடுக்கப் போறார்..
-ஷார்ஜா
15-2-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.