ஞாயிறு, 29 மார்ச், 2020

நினைவுகளில் வாழ்கிறாய் நீ



உன் நினைவில் நனைகையில்

என்னை மறக்கிறேன்

உடலில் உற்சாகம் வழிகிறது

நேரம் மறக்கிறேன்

நேரமோ காலத்தை

இழுத்து செல்கிறது

சூழல் மறக்கிறேன்

நடக்கும் நிகழ்வோ

பின்னாளில் அசை போட

நினைவாகாமல் கரைகிறது...

ஊண் மறக்கிறேன்

உன் நினைவுகளே

பசியாற்றும் உணவாகிறது..

உன் புராணம் பாடுகிறேன்

அகப்படுபவர்களை உன் நினைவு

ஒரு முறை தட்டி செல்கிறது..

இப்படி உன் நினைவில்

நான் வாழ வாழ

என்னுள் வளர்கிறாய் நீ………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.