ஞாயிறு, 29 மார்ச், 2020

கோபம்



சிலரது வார்த்தைகளில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன்...

வார்த்தைகள் நழுவும்போதோ
கோபம் தன் பிடியைத்
தருகிறது..

மட்டுமன்றி முன் நிகழ்ந்த
அத்தனை கசப்பின்
சாயங்களையும்
தன் பிடியின் வழியே
என்னுள் இறக்குகிறது..

தருவிக்கப்பட்ட சாயங்களுடன்
கோரமாக காட்சியளித்து
ராட்சசி எனும் பட்டத்துக்குள்ளும்
பொருத்தப்படுகிறேன்..

வார்த்தை தந்தவர்களோ
தன் வார்த்தைகளைப் போலவே
நழுவியிருக்கின்றனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.