விலக்கவேண்டும் என்ற
உன் எண்ணத்தை அறிந்து
காரணம் கேட்டபோது
ஆமோதிப்பும் மறுப்பும்
இல்லாமல் மெளனமாக
உண்மை என உணர்த்தினாய்....
உன் எண்ணத்தை அறிந்து
காரணம் கேட்டபோது
ஆமோதிப்பும் மறுப்பும்
இல்லாமல் மெளனமாக
உண்மை என உணர்த்தினாய்....
இருள் தன் பணியை
தொடங்கிய நேரத்தில்
உன் மனம் எண்ணியவாறே
எவ்வித வார்த்தை தாக்குதலும்
இல்லாமல் முடிந்து போனது
எனக்கு மனநிறைவை மட்டுமே
தந்திருந்த நம் நட்புறவு...
தொடங்கிய நேரத்தில்
உன் மனம் எண்ணியவாறே
எவ்வித வார்த்தை தாக்குதலும்
இல்லாமல் முடிந்து போனது
எனக்கு மனநிறைவை மட்டுமே
தந்திருந்த நம் நட்புறவு...
அதன் பின்னும் கிளர்ந்தெழுந்த
ஆர்ப்பரிக்கும் ஆசையால்
எதிர்பார்த்திருந்த உன் தொலைபேசி
அழைப்பு என் அலைபேசியில்
மின்னவேயில்லை...
ஆர்ப்பரிக்கும் ஆசையால்
எதிர்பார்த்திருந்த உன் தொலைபேசி
அழைப்பு என் அலைபேசியில்
மின்னவேயில்லை...
என் செய்கையில் தவறில்லாத
காரணங்களை அறிந்து கொள்ள
தொடங்கிய கணம் முதல்
கவலை இலட்சியங்களாக
பரிணமிக்க ஆரம்பித்திருந்தன....
காரணங்களை அறிந்து கொள்ள
தொடங்கிய கணம் முதல்
கவலை இலட்சியங்களாக
பரிணமிக்க ஆரம்பித்திருந்தன....
மதிக்காத அன்பு
தேவையில்லையென என்னாலும்
துண்டித்து விட்ட உறவு துண்டித்தே
இருக்கட்டும் என உன்னாலும்
இருவரின் தொலைபேசி
எண்களும் மாற்றப்பட்டன ....
தேவையில்லையென என்னாலும்
துண்டித்து விட்ட உறவு துண்டித்தே
இருக்கட்டும் என உன்னாலும்
இருவரின் தொலைபேசி
எண்களும் மாற்றப்பட்டன ....
விரும்பி நேசித்த இதயம்
வெறுக்கவிடாது
உணர்ந்து உன் தொடர்பை
தேடியபோது
சிரமம் இல்லாமல்
கிடைத்தும் போனது...
வெறுக்கவிடாது
உணர்ந்து உன் தொடர்பை
தேடியபோது
சிரமம் இல்லாமல்
கிடைத்தும் போனது...
பழையதை மறந்து பேச
மனம் முட்டும் நேரங்களில்
செல்லும் வார்த்தைகள்
காயப்படுமோ என்ற அச்சத்திலேயே
அதை தட்டிக்கொடுத்து
முடக்கி வைக்கிறேன்....
மனம் முட்டும் நேரங்களில்
செல்லும் வார்த்தைகள்
காயப்படுமோ என்ற அச்சத்திலேயே
அதை தட்டிக்கொடுத்து
முடக்கி வைக்கிறேன்....
பேசும் வாத்தைகளால்
நட்பு உயிர் பெறலாம்
மறுபிறப்பு எடுக்கும் நட்போ
பழைய காயங்கள்
தந்து விட்டு சென்ற
லட்சியங்களைக் காற்றோடு
கரைத்து விடுமே....
நட்பு உயிர் பெறலாம்
மறுபிறப்பு எடுக்கும் நட்போ
பழைய காயங்கள்
தந்து விட்டு சென்ற
லட்சியங்களைக் காற்றோடு
கரைத்து விடுமே....
லட்சியங்கள் வெற்றிகளாகும்
நாள் வரை
குறிக்கோளை மழுங்கவிடாமல்
இப்படியே தொடரும்
என் மௌனப் பார்வை....
நாள் வரை
குறிக்கோளை மழுங்கவிடாமல்
இப்படியே தொடரும்
என் மௌனப் பார்வை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.