திங்கள், 16 மார்ச், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (2)


  • பிறரின் அலட்சியம்தான் நம்மை ஒரு லட்சியம் எடுக்க வைக்குது...
  • யாரையாவது குறைவா மதிப்பிட்டோம்னா, அவங்க நம்மை விட எல்லாவற்றிலும் நிறைவா இருக்கறத பார்க்க வேண்டிய காலமும் வரும்...
  • மனைவியின் அன்பு, கணவன் வாழ்வில் இடறி விழ போகும்போது கைகொடுக்கும் ஒரு ஊன்றுகோல். பெரும்பாலான கணவர்களுக்கு ஊன்றுகோல் ஊன்றும் வயதில்தான் அதன் அருமை புரிகிறது.....
  • ஒருவரின் துரோகத்தை மன்னித்து மறப்பவனுக்கு, துரோகம் இழைத்தவனே வைக்கும் இன்றைய பெயர் "இளிச்சவாயன்"....
  • அநியாயத்தை தட்டிக் கேட்பவருக்கு, அநியாயம் செய்பவர்கள் மட்டுமல்ல, அநியாயம் செய்பவர்களின் நட்புகளும், உறவுகளும் கூட அந்நியமாகி போகிறார்கள்....
  • சிலர், அவர்களது காரியம் ஆகும் வரைதான் நம்முடன் இருப்பர்.காரியம் முடிந்தவுடன், நமக்கும், அவர்களுக்குமான நட்புக்கும் "காரியம்"செய்து விட்டு, அவர்களின் காரியத்தை பார்க்க சென்று விடுவர்....
  • எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றால், நிறைய பொய் பேசுவதிலும் வல்லவர்களாக இருக்க வேண்டும்.. பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமாகததால் சிலருக்கு நல்லவர்களாகவும், சிலருக்கு கெட்டவர்களாகவும் தென்படுகின்றனர்...
  • காலத்தில் கேட்காத மன்னிப்பு காலம் முழுவதும் அழ வைக்கும்...
  • ஒரு சாதனையாளரின் திறமையும், மதிப்பும் உள்ளூர்வாசிகளுக்கும், உறவுகளுக்கும் தெரியாது., அப்படியே தெரிந்தாலும் வாழ்த்த மனமிருக்காது....
  • சந்தோஷமான நேரங்களை வேகமாகவும் சோகமான நேரங்களை மெதுவாகவும் கடக்கிறது மனம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.