திங்கள், 16 மார்ச், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (6)


  • நீதியை விலை பேசும் நீதியரசர்கள் இருக்கும் வரையிலும், அநீதிக்கு காவல் காக்கும் காவலர்கள் இருக்கும் வரையிலும், இந்த வியாபாரத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரையிலும் நீதி என்பது வார்த்தையில் மட்டுமே இருக்கும் சில அப்பாவிகளுக்கு...
  • நாம செய்கிற நல்லது கெட்டதுக்கு பலன் அடைஞ்சே ஆகணும்.. நல்லது நம்ம காலத்துல அறுவடை ஆனால் நாம பாக்கியசாலிகள்.. கெட்டது நம்ம காலத்துல அறுவடை ஆனா நம் வாரிசுகள் பாக்கியசாலிகள்..
  • நீதியை தீர்மானிக்கும் பொறுப்பை நிதி எடுத்த பிறகு , எதற்கு வெட்டியாக நீதிமன்றங்கள்?
  • நாட்டுல நிதித்துறையும், நீதித்துறையும் சரியா இருந்தாலே ஒரு சீரான நிலையில் நாட்டின் நிலைமை இருக்குன்னு புரிஞ்சுக்கலாம்..,ஆனால்..??
  • நிதித்துறை குளறுபடியால "அப்பாக்கள் பாதிக்கப்படறாங்க"
  • நீதித்துறை குளறுபடியால் "அப்பாவிகள்" பாதிக்கப்படறாங்க...
  • வாழ வழி கேட்பவனுக்கு வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குழி பறிக்காமலாவது இருங்கள்.....
  • சந்தேகம் சந்தோஷத்தை அழிச்சுடும்...
  • ஒருத்தருக்கு நாம முக்கியமான்னு தெரிஞ்சுக்காம, அவங்களை நமக்கு முக்கியமானவங்களா நினைக்கிறதுல இருந்துதான் பல மனக்கஷ்டங்கள் ஆரம்பமாகுது..
  • குழந்தைகளிடம் இருந்து குழந்தைத்தனத்தை சீக்கிரமே விரட்டி விடுகிறது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்,சினிமா காட்சிகளும்...........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.