திங்கள், 16 மார்ச், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (4)

  • வாழ்க்கை வலிகளை மட்டும் தருவதில்லை, அதிலிருந்து மீள பல வழிகளையும் தந்திருக்கிறது... சரியான வழியை தேர்ந்தெடுப்போர் நிம்மதியாக வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர்....
  • சிலருக்கு நமக்கு கஷ்டம் கொடுத்து பார்த்து ரசிப்பதில் மட்டுமே இஷ்டம்... நாமும் அதை இஷ்டப் பட்டு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதில் அவர்களுக்கு நஷ்டம்.. 
  • ஒரு காரணமும் இல்லாமல் சிலர் நம்மை விட்டு விலகுவதற்கு, நம்மால் அவர்களுக்கு ஆக வேண்டிய காரியங்கள் முடிவுக்கு வந்ததே காரணம்.......
  • நாம் கஷ்டப்படும் காலங்களிலும், நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் காலங்களிலும்தான் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உள்ளத்தை நன்கு அறிய முடிகிறது....
  • நாம் உண்மையாக நேசிக்கும் சில நண்பர்கள், நம்மை நேசிக்கவில்லை என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருப்போம்.. கொஞ்சம் திரும்பி பார்த்தால், நம்மை நேசிக்கும் சிலரின் உண்மையான நட்பை நாமும் புரிந்து கொள்ளாமலிருப்போம், நம்மை அறியாமலே.....
  • வாழ்க்கையில் மறைந்து விட்ட மனிதர்களின் (நெருங்கிய உறவுகள் தவிர) பிரிவின் வலியை விட , இழந்து விட்ட உறவுகளின் பிரிவின் வலியே அதிகம்.....
  • நட்புகளின் நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருபவரே நட்பு கொள்ள சிறந்தவர்...
  • பட்ட அவமானம் மனதில் இருந்தால்தான் சாதிக்கும் உணர்வை மனம் கொடுத்துக் கொண்டே இருக்கும்...
  • ஒரு போட்டோ தேவைங்கிற பட்சத்துல, எது நல்லா இருக்கோ அதை எடுத்துக்கலாம்னு, நிறைய போட்டோஸ் எடுத்து வைப்போம்... அப்புறம் அதுல ஒரு போட்டோ தேர்வு பண்றதுக்கு படற பாடு இருக்கே.... அதே போலதான் தேவைக்கு அதிகமா எது இருந்தாலும் குழப்பம் மட்டுமே மிஞ்சும்...
  • அவமானப்படுத்தியவரை, அவமானப்படுத்தியதை மறந்து மன்னிக்கலாம்.. ஆனால் அவமானத்தை மறந்தும் மன்னிக்க கூடாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.