திங்கள், 16 மார்ச், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (7)


  • ஒரு நல்ல/தவறான பெண்ணை பற்றி ஒரு ஆண் விமர்சிக்கும் விமர்சனமே அவன் குணத்தை வெளிக் காட்ட போதுமானதாக இருக்கிறது..
  • நம் அன்பை மட்டுமே பெறுபவர்கள் பதிலுக்கு பரிசாக கஷ்டத்தை மட்டுமே கொடுக்கின்றனர்....
  • காய்த்த மரம் மட்டுமல்ல, இங்கு பல காய்க்காத மரங்களும் கல்லடி படுகின்றன...
  • இருவருக்கு இடையில்  ஒரு பிரச்சனை என்றால்  இருவருமே குற்றவாளியாக  பார்க்கப்படுகிறார்கள் அவரவர் எதிர் தரப்பின் மூலம்...!!!!
  • நல்ல நண்பர்களுக்கு நல்ல உள்ளத்தை விட வேறு தகுதி தேவை இல்லை, அறிவுரை கூற.........
  • கஷ்டப்படாமல் லட்சியத்தை அடைய முடியாது..
  • நம்மை விட்டு விலகணும்னு நினைப்பவர்களிடம் இருந்து நாமும் விலகி இருக்கறதுதான் நம்மோட சுயமரியாதையை காப்பாற்றும் செயல்..
  • அழகிய கனவுகளுடனான சயனமும், இயற்கை அழகை ரசிக்கும் ஜன்னலோர பயணமும் சில நிமிடங்கள் நம்மை மறக்க வைத்து சந்தோசம் தருபவை..
  • அலட்சியப்படுத்துபவர்களை ஒரு விதை முளைக்க போடப்படும் உரம் என எடுத்துக் கொண்டால் கூடும் அவர்களின் எண்ணிக்கையும் லாபமே...!!!
  • ஒரு செல்போனோ அல்லது டெலிபோன் டைரியோ தொலைந்து போனால் கூடவே சில, பல நண்பர்களும் தொலைந்து போகிறார்கள்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.