திங்கள், 16 மார்ச், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (5)



  • டயப்பெர்(Diaper)-களின் உதவியால் குழந்தை வளர்ப்பு கொஞ்சம் சுலபமாகி இருக்கிறது  இன்றைய இளம் தாய்மார்களுக்கு...!!!.
  • ஒரு திருமணமான ஆணுக்கு அவன் அம்மாவின் கருத்து சர்க்கரையை போன்றும், மனைவியின் கருத்து தேயிலை பொடியை போன்றதும் ஆகும். இரண்டும் தேவைக்கேற்ப கலந்தால்தான் வாழ்க்கை என்னும் தேநீரை சுவையாக பருக முடியும்..
  • ஏதாவது ஒரு கல்யாணத்துக்கோ அல்லது வேறு விஷேசங்களுக்கோ புறப்படுவதற்கு முன் பெரும்பாலான வீடுகளில் எழும் வார்த்தை
         "அவங்க நமக்கு எவ்வளவு மொய் வச்சாங்க"
  • பெரும்பாலான திருமணமான பெண்களுக்கு அவர்களின் கணவரின் குணத்தையோ அல்லது பணத்தையோ வைத்துதான் இச்சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் நிர்ணயிக்கபடுகிறது....
  • தலைக்கனம் உள்ளவர்கள், மற்றவர்கள் மனதில் கனமாக இருப்பதில்லை...
  • அழகு என்பது பார்ப்பவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது...அதில் பலருக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருந்தாலும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரே அழகி அவரவர் தாய்தான்..
  • லஞ்சம் வாங்கவும் கூடாது , கொடுக்கவும் கூடாது என்று இதயத்திலிருந்து வீராப்பாக பேசும் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு அரசு வேலை கிடைத்தால் தனது கொள்கையிலிருந்து கிழே இறக்கி விடப்படுகிறார்கள் சூழ்நிலையாலும் தேவைகளாலும்.....
  • நம்மால் அறிந்து கொள்ள முடியாத, ஆனால் நம்முடனே இருக்கும் முக்கியமான எதிரி நம் எதிர் மறை எண்ணங்கள்தான்....
  • அழுகை பலருக்கு கோழைகளின் ஆயுதமாக தெரியலாம்.. ஆனால் உண்மையில் சோதனையில் வரும் "அழுகை" கஷ்டங்களுக்கு தற்காலிக தீர்வு அளிக்கும் ஒரு மருந்து... (குழந்தைங்க அழுகை எல்லாம் இதில் சேராது..)
  • இள வயதில் தவறிய மனிதர்களும், நாம் தொலைத்து பார்க்க முடியாத மனிதர்களும்தான் என்றும் இளமையுடன் வாழ்கின்றனர் நம் மனதில்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.