நேற்று வேலைக்காரன் திரைப்படம் காண சென்றிருந்தோம்.. படம் பார்க்க போகலாம் என முடிவெடுத்ததிலிருந்தே " அம்மா சிவகார்த்திகேயன் படம்தான் போகணும்" என ரோஹித் நியாகப்படுத்திக்கொண்டே இருந்தே இருந்தான்.. ("சிமகாகா" இப்போது அவன் வார்த்தை வளம் வளர்ந்து விட்டதால் வழுவாமல் "சிவகார்த்திகேயன்" ஆகி இருந்தார் ). ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ண தியேட்டர் பெயர்களை அலசும் போதும் தியேட்டர் பெயரை படத்தின் பெயர் என நினைத்து "இல்லை, சிவகார்த்திகேயன் படம்தான் போகணும்" என சொல்லிக் கொண்டே இருந்தான்..
ஆரம்பத்தில் கொஞ்சம் விவரம் தெரிந்து பார்த்த :மான் கராத்தே"விலிருந்து அவன் "சிமகாகா" விசிறி.. இடையில் படங்களின் தொடர் நினைவுகள் அவன் நினைவில் இல்லாததால் பெரிதாக சிவகார்த்திகேயன் பாடல்கள் வந்தாலும் பெரிய ஆர்ப்பரிப்புகள் இல்லாமலிருந்தன...
இரு மாதங்களுக்கு முன் மெர்சல் படம் பார்த்து வந்ததிலிருந்து விஜயின் விசிறியாகி , அதே போல வேட்டி சட்டை, நெற்றியில் குங்கும திருநீற்று பட்டை, ஐப்ரோ உதவியால் குறுந்தாடி மீசை என என்னை அவனுக்கு வரைய வைத்து , அதை படம் பிடிக்கவும் வைத்து அதே வேடத்தோடு அக்கம்பக்கம் வீடுகளுக்கும் சென்று காண்பித்து, எங்களை ஒரு வழியாக்கி விட்டிருந்தான்..
ஆரம்பத்தில் கொஞ்சம் விவரம் தெரிந்து பார்த்த :மான் கராத்தே"விலிருந்து அவன் "சிமகாகா" விசிறி.. இடையில் படங்களின் தொடர் நினைவுகள் அவன் நினைவில் இல்லாததால் பெரிதாக சிவகார்த்திகேயன் பாடல்கள் வந்தாலும் பெரிய ஆர்ப்பரிப்புகள் இல்லாமலிருந்தன...
இரு மாதங்களுக்கு முன் மெர்சல் படம் பார்த்து வந்ததிலிருந்து விஜயின் விசிறியாகி , அதே போல வேட்டி சட்டை, நெற்றியில் குங்கும திருநீற்று பட்டை, ஐப்ரோ உதவியால் குறுந்தாடி மீசை என என்னை அவனுக்கு வரைய வைத்து , அதை படம் பிடிக்கவும் வைத்து அதே வேடத்தோடு அக்கம்பக்கம் வீடுகளுக்கும் சென்று காண்பித்து, எங்களை ஒரு வழியாக்கி விட்டிருந்தான்..
அந்த சமயம் "ஜோசப் விஜய்" பிரச்சனை வெளியில் பூதாகரமாக இருக்க எங்கள் வீட்டுக்குள்ளோ "ரோஹித் விஜய் " பிரச்சனை மெல்ல புகை விட ஆரம்பித்திருந்தது.. ஆம், "இனிமேல் என் பேர் ரோஹித் விஜய் .. அப்படிதான் என்னை கூப்பிடனும்" என ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தான்...
இந்த நிலையில்தான் நேற்று வேலைக்காரன் படம் பார்க்க சென்றிருந்தோம்.. படம் முழுவதும் முழு ஈடுபாட்டோடு , மறக்காமல் வாங்கி எல்லா தீனியையும் கொறித்துக் கொண்டே திருப்தியாக பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்ததும் "இனிமேல் என்னை சிவகார்த்திகேயன் இல்லேன்னா விஜய் அப்படீன்னுதான் கூப்பிடனும் , ரோஹித்னு கூப்பிட்டா நான் திரும்பி பார்க்க மாட்டேன்" என எங்களிடம் மாட்டும் அல்லாமல் கிறிஸ்துமஸ் சாப்பாடு கொடுக்க வந்திருந்த பக்கத்து வீட்டாரிடமும் கண்டிஷன் போட ஆரம்பித்து விட்டான்..
நிகிதாவுக்குள் அவரின் ரசிகை , இவரின் ரசிகை என்ற ஆர்ப்பரிப்பு இல்லை.. பொதுவாக பெண்கள் (குழந்தைகளாக இருக்கும்போதே ) அழகியலை மட்டுமே ரசிக்கிறார்கள்.. அப்படி அவளின் அழகியல் ரசனை , "அந்த பொண்ணு (பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் குழந்தை )போட்டிருந்த ஷூ, நல்லா இருந்தது, டிரஸ் நல்லா இருந்தது, அது போல எனக்கும் வாங்கிக்கொடு "என்பதோடு இப்போதைக்கு இருக்கிறது என்பதே எனக்கு கொஞ்சம் நிம்மதி...
உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை , அதேபோல் உன்னை விட தாழ்ந்தவரும் யாரும் இல்லை என நான் பிள்ளைகளுக்கு போதித்து வரும் வேளையில் வந்திருக்கிறது இந்த "ரசிக" நெருக்கடி...
எந்த கலைஞருக்கும், எந்த கலைக்கும் ரசிகராக இருப்பதில் தவறு இல்லைதான்.. ஏனெனில் எல்லோருமே ரசிப்புத் தன்மையின் நிழலில் ஒதுங்கி ஒதுங்கியே வாழ்ந்து வருகிறோம்.. ஆனால் ரசிகன் என்பதைத் தாண்டி தொண்டன் ஆகி விடும் அளவுக்கு ஒருவரின் ரசிப்புத் தன்மை எல்லை தாண்டக் கூடாது என்பதே என் எண்ணம்..
தொண்டரானால் , ரசிப்பவரையே கடவுளாக நினைக்கத் தோன்றும், நிஜ வாழ்க்கை, நிழல் வாழ்க்கை வேறுபாடு தெரியாது , அவரையே நம்மை ஆளவைக்க அதிகாரம் கொடுக்கத் தோன்றும்.. அப்பப்பா... ஆக ரசிகனாக நிறுத்திக் கொள்வது உத்தமம்...
தொண்டரானால் , ரசிப்பவரையே கடவுளாக நினைக்கத் தோன்றும், நிஜ வாழ்க்கை, நிழல் வாழ்க்கை வேறுபாடு தெரியாது , அவரையே நம்மை ஆளவைக்க அதிகாரம் கொடுக்கத் தோன்றும்.. அப்பப்பா... ஆக ரசிகனாக நிறுத்திக் கொள்வது உத்தமம்...
இப்போது ரோஹித் ரசிகனாக இருக்கிறான்.. அவர்களை போலவே செய்யும் சில செயல்கள் இந்த வயது தாண்டினால் மாறி போகும் என்ற நினைப்பு இருக்கிறது..... ஆனால் மாறாமல் போனால்...நாளை சிவகார்த்திகேயனுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு ,தான் ரசிப்பவரிடம் ஒரு வார்த்தை பேச (ஏன் தொடக்கூட) அனுமதி இல்லாமல் அவதி அவதியாக திருப்பதி பெருமாளை ஒரு நொடி தரிசிக்கும் பக்தனை போல கேமரா கண்களுக்குள் புழுவை போல உள்வாங்கப்படும் ஒரு தொண்டனாகி விட்டால்... நினைத்தாலே தலையில் எரிமலை கொட்டியதாக நினைவு சூடாகிறது... ம்ஹூம்.. என் மகனை ரசிகன் என்ற எல்லையை தாண்ட விடவே மாட்டேன்..
- கோவை
26-12-2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.