புதன், 20 மே, 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (8)

  • வெறும் கண்ணீர் மட்டும் வெற்றியின் சிகரம் எட்டாது..
  • நம் குணத்தை போலவே மற்றவர்களின் குணங்களும் என்ற எண்ணமே மற்றவர்களின் செயல்பாடுகளை குறித்து கவலை கொள்ள அடிப்படை காரணம்..
  • பிரச்சனைகள் தொடங்கும்போதுதான் பிரார்த்தனைகளும் தொடங்குகின்றன..
  • நல்லது செய்யும் போது அப்பா குழந்தையாகவும், குறும்பு செய்யும்போது அம்மா குழந்தையாகவும் மாறிட்டு இருக்கு அப்பா, அம்மாவின் குழந்தை...
  • சட்டம் படித்துதான் நீதிபதியாகணும்னு அவசியமில்லை, ரெண்டு குழந்தைகளுக்கு பெற்றோரா இருந்தாலே போதும்.. தீர்ப்பு சொல்ல அடிக்கடி வழக்கு வந்துட்டே இருக்கும்....
  • கடனும், வறுமையும் நம் முன் ஆடும் போது, நம் முன் இருந்த சில உறவுகளும் நட்புகளும் மாயமாகி விடுகின்றனர்...
  • ஒருவரின் "வெற்றி" தரும் அவரின் மீதான ஒட்டு மொத்த பார்வையை விட அவர் " மரணம்" தரும் அவர் மீதான பார்வை குவியல்கள் அதிகம்.....
  • என்னை விட வேகமாக கிளம்புகிறது நேரம்....
  • சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட சாதிக்க தூண்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது....
  • ஒருவரின் குணத்தை பார்த்தோ, பழகும் விதத்தை பார்த்தோ இச்சமூகம் அவனை பார்ப்பது குறைவு.. பெரும்பாலும் ஒரு மனிதன் மற்றவர்களின் வார்த்தைகளின் மூலமே பார்க்கப்படுகிறான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.