தர்மம் நம் தலையை
மட்டுமல்ல
நம் தலைமுறையையும்
காக்கும்..
நாம் செய்த உதவியை
சிலர் மறந்து விடுவர்
நாட்கணக்கிலேயே!
ஆனால்
நாம் கொடுத்த
ஒரு அரிசி பருக்கையை கூட
வரவாக வைத்திருப்பான்
இறைவன்
நம் கணக்கிலேயே!
நாம் ஒருவருக்கு
சரியான நேரத்தில்
செய்யும் உதவி
மற்றொருவர் மூலம்
இக்கட்டான நேரத்தில்
நமக்கும் உதவும்!
நம் பிள்ளைகளுக்கு
நாம் சேர்க்கும்
மண்ணும் பொன்னும்
பிறரால் களவாடவும்
கையகப் படுத்தவும்
படலாம்!
ஆனால்
இறைவனின் பாதுகாப்பில்
நாம் சேர்க்கும்
புண்ணியத்தை
கன்னமிட முடியாது
யாராலும்!
நாம் நம் சந்ததிகளுக்கு
சேர்க்க வேண்டியது
புண்ணியம் என்ற
சொத்தை!
இன்றே
நம் பிள்ளைகளுக்கும்
கற்றுக் கொடுப்போம்
இவ்வித்தை!
கையிலெடுப்போம்
தினம் ஒருவருக்கு
உதவுவது என்ற
கொள்கையை
கொடுப்போம்
நம் சந்ததிக்கு
அதன் மூலம்
வசந்தமான
வாழ்க்கையை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.