புதன், 20 மே, 2015

ஒட்டி இருக்கும் நினைவுகள்

மனதில் இருந்து
என்னை விரும்பாத
சில மனங்களையும்
அவர்களால் நிகழ்ந்த
சில விரும்பாத செயல்களையும்
உதறி விட முயல்கிறேன்
இருந்தும் என் சிந்தையையும் நேரத்தையும்
தன்னகத்தே ஈர்த்து
பலம் இழந்த வெற்றுடலாய் எனை ஆக்கி
குதூகலிக்கின்றன அந்நினைவுகள்......!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.