ஞாயிறு, 17 மே, 2015

மழலை கவிதைகள்

நான் அடித்து
வந்த அழுகையை
"வலிக்குதா" என்ற
என் வார்த்தைக்காக
ஓடி வந்தணைத்து
திருப்பி கொடுத்தாய்
என்னிடம்.....!!!



--------------------------

எவ்வித சந்தர்ப்பத்திலும்
சந்தோஷத்தில் முழுதும்
லயிக்காத மனம்
தோற்று விடுகிறது
குழந்தையின் சிரிப்பிடம்....!!!

---------------------------

நாம் சோர்ந்திருக்கும்போது
வந்தணைத்து ஸ்பரிசத்தால்
தேற்றும் குழந்தையிடம்
காண முடிகிறது
தாயின் அரவணைப்பை....!!!

---------------------------

குழந்தைகள் இவ்வுலகை
கற்றுக் கொள்ள
ஆரம்பிக்கும் முன்
நாம் கற்றுக் கொள்ள
நிறைய இருக்கிறது
அவர்களிடமிருந்து....!!!

------------------------------

ஒவ்வொரு வார்த்தையும்
தனித்துவமான அழகை
பெறுகின்றன
குழந்தைகளால்
முதல் முறையாக
பேசப்படும் பொழுது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.