அரபு நாட்டில்
மழை மிக அரிது!
மழைப் பொழிவை
குழந்தைகளுக்கு
காண்பிக்கவும்
மழை நீரில்
காகிதக் கப்பல் விட
கற்றுக் கொடுக்கவும்
அரபு நாட்டில்
வாய்ப்பில்லையெனக்கு.......
அப்படியே அரிதாக
மழை பெய்தாலும்
தூறலை மட்டும்
சாரலாக விட்டு
செல்லும் பால்கனியில்.....
ஆனால்
தொலைக்காட்சிகளின்
புண்ணியத்தால்
சிறிதளவு நீங்குகிறது
அக்குறை....
ஆம்!
இந்தியாவில்
மழை என்று
வரும் செய்திகளில்
காட்டப்படும் காட்சிகளின்
மூலம்
இங்கிருந்தே
அனுபவிக்கிறேன்
மழை பெய்யும்
சூழலை....
பாலைவனத்து மண்ணில்
இருந்து நுகர்கிறேன்
மழைக்கு முன் வரும்
மண்வாசனையை..
வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும்
முடங்கியிருக்கும்
எனக்கு உண்மையிலேயே
உணர முடிகிறது
அவ்வற்புதத்தை.....
ஆம்!
படிக்கையிலும்
பார்க்கையிலும்
உணர முடிகிற
மழை ஓர்
அற்புதம்தான்..........
- இது நான் இங்கு வந்த ஆரம்பத்தில் எழுதியது... ஆனால் இப்போது
மேனியில் மோதும் சில்லென்ற காற்றும்
தார் சாலையிலும், மண் சாலையிலும்
குழிந்த பகுதியில் தேங்கிய நீரின் மேல்
விழுந்து வட்டமாக பரவும் நீர் துளிகளும்
வேகமாக கடக்கும் வாகனத்தின்
சக்கரத்தால் மெல்ல உயர்ந்தெழும்
நீரின் எழுச்சியும்
சட சடவென விழுவதால்
எழும் மண்ணின் வாசனையும்
சாரலை பன்னீரை போல்
தூவும் வகையில் மிதமாகவும்
தாளிக்கும் ஓசையுடன் வேகமாகவும்
இவ்வாறு நேரத்துக்கு ஒரு ரூபத்தில் வருகை தந்து
மழைக்கு தூரமான தேசம் இதுவென
நான் நினைத்தது தவறு என
கடந்த மூன்று மாதங்களாக
சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது மழை !!!!...
மழை மிக அரிது!
மழைப் பொழிவை
குழந்தைகளுக்கு
காண்பிக்கவும்
மழை நீரில்
காகிதக் கப்பல் விட
கற்றுக் கொடுக்கவும்
அரபு நாட்டில்
வாய்ப்பில்லையெனக்கு.......
அப்படியே அரிதாக
மழை பெய்தாலும்
தூறலை மட்டும்
சாரலாக விட்டு
செல்லும் பால்கனியில்.....
ஆனால்
தொலைக்காட்சிகளின்
புண்ணியத்தால்
சிறிதளவு நீங்குகிறது
அக்குறை....
ஆம்!
இந்தியாவில்
மழை என்று
வரும் செய்திகளில்
காட்டப்படும் காட்சிகளின்
மூலம்
இங்கிருந்தே
அனுபவிக்கிறேன்
மழை பெய்யும்
சூழலை....
பாலைவனத்து மண்ணில்
இருந்து நுகர்கிறேன்
மழைக்கு முன் வரும்
மண்வாசனையை..
வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும்
முடங்கியிருக்கும்
எனக்கு உண்மையிலேயே
உணர முடிகிறது
அவ்வற்புதத்தை.....
ஆம்!
படிக்கையிலும்
பார்க்கையிலும்
உணர முடிகிற
மழை ஓர்
அற்புதம்தான்..........
- இது நான் இங்கு வந்த ஆரம்பத்தில் எழுதியது... ஆனால் இப்போது
மேனியில் மோதும் சில்லென்ற காற்றும்
தார் சாலையிலும், மண் சாலையிலும்
குழிந்த பகுதியில் தேங்கிய நீரின் மேல்
விழுந்து வட்டமாக பரவும் நீர் துளிகளும்
வேகமாக கடக்கும் வாகனத்தின்
சக்கரத்தால் மெல்ல உயர்ந்தெழும்
நீரின் எழுச்சியும்
சட சடவென விழுவதால்
எழும் மண்ணின் வாசனையும்
சாரலை பன்னீரை போல்
தூவும் வகையில் மிதமாகவும்
தாளிக்கும் ஓசையுடன் வேகமாகவும்
இவ்வாறு நேரத்துக்கு ஒரு ரூபத்தில் வருகை தந்து
மழைக்கு தூரமான தேசம் இதுவென
நான் நினைத்தது தவறு என
கடந்த மூன்று மாதங்களாக
சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது மழை !!!!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.