புதன், 20 மே, 2015

எண்ணம்போல் வாழ்வு

கடக்கும் ஒவ்வொரு இரவிலும்
நித்திரை அழைக்கும் முன்
உனை நேரில் திரும்ப காண்பது
போலான காட்சியை
என் மனக்கண்ணில் ஓட விடுகிறேன்...
காலம் இதை உண்மையாக்க
எண்ணம் கொண்டிராமல் போனாலும்
எனதிந்த எண்ணம் என்றாவது ஒருநாள்
காலத்தை உண்மையாக்க வைக்கும்
என்ற நம்பிக்கையில்......!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.