தம்பியின் திருமண விஷயம் சம்பந்தமாக நானும் என் அம்மாவும் சிவானந்தா காலனி வரை சென்றிருந்தோம்... வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள பஸ் ஷெல்டர் அருகே ஒரு பெட்டிக் கடையில் இளநீரும் விற்றுக் கொண்டிருப்பதை பார்த்து , இளநீர் குடிக்கலாம் என அங்கு சென்று, வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்...
அப்போது கண் பார்வையற்ற ஒருவர் , சிவானந்தா காலனி பஸ் ஸ்டாப்தானே இது" என கேட்கவும் "ஆம் இதுதான், உங்களுக்கு பின்னால் பெஞ்ச் இருக்கிறது, உட்காருங்கள்" என கூறினேன்.. அவரின் வார்த்தைக்கு நான் உடனே பதில் கூறியதாலோ என்னவோ, அவர் மேலும் "பஸ் இப்படி போகுமா, இல்ல அப்படி போகுமா" என இடது பக்கத்தையும், வலது பக்கத்தையும் தம் கையால் சைகை காட்டி, தான் ரோட்டின் எந்த புறம் நின்று கொண்டிருக்கிறோம் என அறிவதற்காக கேட்டார்.. "பஸ் இங்கிருந்து காந்திபுரம் நோக்கி இடதுபுறம்தான் போகும்" என கூறியவுடன், "இங்க பெட்டி கடை இருக்கா" என கேட்டார்.. "ஆம்" என கூறியவுடன் "டீ இருக்கா" என அவர் கேட்கவும், வேறு ஒருவருக்கு இளநி சீவிக் கொண்டிருந்த கடைக்காரரிடம் "டீ இருக்கிறதா" என கேட்டேன்.. அவரும் இருக்கிறது என கூறவும், திரும்ப அந்த மனிதர் "இது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கம் இருக்க (ஒரு பெயரை சொல்லி- அது தெளிவாக என் காதில் விழவில்லை) கடைதானே" என கேட்கவும் "பஸ் ஸ்டாண்டுக்கு பக்கம் இருக்கறதுதான்" என கூறிவிட்டு , அவர் ரெகுலராக போகும் கடையை கேட்கிறாரோ என நினைவு வந்தவளாக, வேறு ஏதேனும் பெட்டிக்கடை அருகில் இருக்கிறதா என பார்த்தேன்.. நாலைந்து கடைகள் தள்ளி சிறு இடைவெளியில் இரு வேறு பெட்டிக் கடைகளும் இருந்தன.. அதை சொல்ல வருவதற்குள், அவர் ஸ்ட்ராங்கா ஒரு டீயும், வடையும் என கூறவும், இளநி சீவிக் கொண்டிருந்தவர், அதற்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அதை கொடுத்து விட்டு பெட்டி கடைக்குள் நுழைந்தார்..
இதனிடையே நாங்கள் சாப்பிட்டு முடித்ததால் பணம் கொடுத்து விட்டு கிளம்ப எத்தனிக்கையில், அவர் என்னிடம் "தயிர் சாதம், தக்காளி சாதம் போல் ஏதும் பொட்டல சாப்பாடு இங்க இருக்கா" என கேட்டார்.. இல்லீங்க, இங்க எதுவும் இல்லை என கூறிக்கொண்டிருந்த போது , கடைக்காரர் ஏற்கனவே போட்டு வைத்திருந்த டீயை ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் (Transparent Plastic Cup) கொண்டு வந்து அவரிடம், இந்தாங்க என நீட்டினார்.. நான் உடனே , இங்கு கண்ணாடி டம்ளர் ஏதும் இல்லையோ என கடைக்கு உள்ளே பார்த்தால், கண்ணாடி டம்பளர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..
அப்போது பிளாஸ்டிக் கப்பை வாங்கியவர், " என்னங்க இதுல கொடுக்கறீங்க" என கேட்கவும், நான் அந்த கடைக்காரரின் முகத்தை பார்த்தேன்.. அப்போது அதை நான் கவனிப்பதை பார்த்த அந்த கடைக்காரர், "குடிங்க, குடிங்க" என சொல்லி உள்பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டார்..
அதற்குள் பஸ் வரவே,அம்மா வா என அழைக்க பஸ்ஸில் ஏற சென்றேன்.. (அங்கு அடிக்கொருமுறை முறை பேருந்து இருந்தாலும், வீட்டில் சிறு குழந்தைகளை உடல் நலம் தேறி வரும் அப்பாவிடம் விட்டு வந்த பதட்டம் வேறு) அப்போது அவர், எனக்கு இதுலதான் தருவீங்களா என இரண்டு முறை பரிதாபமாகக் கேட்டது காதில் விழுந்தது..
நான் ஏறிய பேருந்து அக்கடையை கடக்கும்போது பார்த்தேன்.. வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.. ஒரு வார்த்தை ஏன் இப்படி செய்கிறீர்கள் என அவரை கேட்டிருக்கலாமோ என மனம் அடித்துக் கொண்டது.. இது அந்த கண்பார்வற்றவருக்கு பழக்கமாகிக் கூட போயிருக்கலாம்.. அதனால் அவர் ஒருவேளை, இந்த சம்பவத்தில் இருந்து சீக்கிரம் மனதை நிகழ் சம்பவத்துக்குள் ஐக்கியப்படுத்தி இருக்கலாம்..
நமக்கே சிறிய பிளாஸ்டிக் கப்பில் சூடாக தேநீர் அருந்தும் போது கொஞ்சம் சிரமப்படுவோம்.. அப்படி இருக்க கண்பார்வையற்றவருக்கு, இப்படி பாகுபாடு பார்த்து கொடுக்கிறாரே என்ற வருத்தம் என்னை சூழ்ந்து கொண்டது.. அவர் வழக்கமாக செல்லும் கடையையோ அல்லது வேறு கடையையோ அவருக்கு காண்பித்து இருக்கலாம் என தோன்றியது... இப்படி பட்டவர் கடையில் போய் இளநீர் குடித்தோமே என்ற சங்கடமும் என்னை வாட்டி எடுக்க, பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை என் அம்மாவிடம் புலம்பிக்கொண்டே இருந்தேன்..
இதே போல் நான் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தேநீர் குடிக்க KG பக்கம் உள்ள கடைக்கு சக தோழி ஒருவருடன் சென்றிருந்தேன்.. அப்போது பசிக்குது என வயிறைக் காட்டி, ஒருவர் காசுக்காக கை நீட்டினார்.. அவரை பார்த்தால் சிறு வயதில் இருந்தே பிச்சை எடுப்பவர் போல் தோன்றவில்லை..நன்றாக வாழ்ந்து வறுமையாலோ அல்லது ஏதேனும் பிரச்சனையாலோ வீட்டை விட்டு வந்து இங்கு சுற்றிக் கொண்டிருப்பவர் போல் தோன்றியது.. வெட்டாத முடியும், வழிக்காததால் நீண்டிருந்த தாடியும், அழுக்கேறிய அவரின் ஆடையும் அவர் அப்படி வீட்டை விட்டு வந்து நாட்களாகி இருக்கும் என உணர்த்தின..
உடனே கடைக்காரரிடம் அவருக்கும், ஒரு டீயும் போண்டாவும் கொடுக்குமாறு கூறினேன்.. உடனே காசு கேட்டு வந்தவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.. (அதை நினைக்க நினைக்க இன்னும் எனக்கு மனதில் சிறு சந்தோஷம், ஆத்ம திருப்தி வரும்.... இதுக்கே இப்படி என் மனம் சந்தோஷப்படுகிறதென்றால், பலருக்கு எண்ணற்ற உதவிகளை செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற உள்ளங்களுக்கு எவ்வளவு ஆத்ம திருப்தி கிடைக்கும்.. இது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்..)
அப்போது அக்கடைக்காரரும் இது போலவே அவருக்கும் பிளாஸ்டிக் கப்பில்தான் கொடுத்தார்.. அப்போதே இது எனக்கு நெருடியது...
அவர்கள் பார்வையில் சுகாதாரமாக தோன்றும் மனிதர்களின் எச்சில் பட்டால் அசுத்தமாகாத டம்பளர்கள் , அவர்கள் ஆளையும், உடையையும் பார்த்து ஒதுக்கும் மனிதர்களின் எச்சில் பட்டால் மட்டும் அசுத்தமாகி விடுமோ அல்லது அதை கழுவினால் கூட நோய் தோற்றும் என்ற அச்சமா இல்லையெனில் அவர்கள் குடித்த டம்ப்ளரை கழுவ அருவருப்பா?.... ஒருவேளை , அவர்களுக்கு டம்ளர்களில் குடிக்க கொடுப்பதை பார்த்தால் வேறு யாரும் டீ குடிக்க வர மாட்டார்கள் என்ற அச்சமா? (இத்தனைக்கும் அந்த கண்பார்வையற்றவர் டீசன்ட்டாகத்தான் இருந்தார்..)
எது எப்படியோ,
தீண்டாமை வழக்கம் வழக்கொழிந்து விட்டது என நாம் சொல்லிக் கொண்டிருக்கையில், பலர் இது போல ஆளை பார்த்தும், உடையை பார்த்தும் தீண்டத்தகாத காரியங்களை செய்து தீண்டாமை இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதனை சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர்.....
அப்போது கண் பார்வையற்ற ஒருவர் , சிவானந்தா காலனி பஸ் ஸ்டாப்தானே இது" என கேட்கவும் "ஆம் இதுதான், உங்களுக்கு பின்னால் பெஞ்ச் இருக்கிறது, உட்காருங்கள்" என கூறினேன்.. அவரின் வார்த்தைக்கு நான் உடனே பதில் கூறியதாலோ என்னவோ, அவர் மேலும் "பஸ் இப்படி போகுமா, இல்ல அப்படி போகுமா" என இடது பக்கத்தையும், வலது பக்கத்தையும் தம் கையால் சைகை காட்டி, தான் ரோட்டின் எந்த புறம் நின்று கொண்டிருக்கிறோம் என அறிவதற்காக கேட்டார்.. "பஸ் இங்கிருந்து காந்திபுரம் நோக்கி இடதுபுறம்தான் போகும்" என கூறியவுடன், "இங்க பெட்டி கடை இருக்கா" என கேட்டார்.. "ஆம்" என கூறியவுடன் "டீ இருக்கா" என அவர் கேட்கவும், வேறு ஒருவருக்கு இளநி சீவிக் கொண்டிருந்த கடைக்காரரிடம் "டீ இருக்கிறதா" என கேட்டேன்.. அவரும் இருக்கிறது என கூறவும், திரும்ப அந்த மனிதர் "இது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கம் இருக்க (ஒரு பெயரை சொல்லி- அது தெளிவாக என் காதில் விழவில்லை) கடைதானே" என கேட்கவும் "பஸ் ஸ்டாண்டுக்கு பக்கம் இருக்கறதுதான்" என கூறிவிட்டு , அவர் ரெகுலராக போகும் கடையை கேட்கிறாரோ என நினைவு வந்தவளாக, வேறு ஏதேனும் பெட்டிக்கடை அருகில் இருக்கிறதா என பார்த்தேன்.. நாலைந்து கடைகள் தள்ளி சிறு இடைவெளியில் இரு வேறு பெட்டிக் கடைகளும் இருந்தன.. அதை சொல்ல வருவதற்குள், அவர் ஸ்ட்ராங்கா ஒரு டீயும், வடையும் என கூறவும், இளநி சீவிக் கொண்டிருந்தவர், அதற்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அதை கொடுத்து விட்டு பெட்டி கடைக்குள் நுழைந்தார்..
இதனிடையே நாங்கள் சாப்பிட்டு முடித்ததால் பணம் கொடுத்து விட்டு கிளம்ப எத்தனிக்கையில், அவர் என்னிடம் "தயிர் சாதம், தக்காளி சாதம் போல் ஏதும் பொட்டல சாப்பாடு இங்க இருக்கா" என கேட்டார்.. இல்லீங்க, இங்க எதுவும் இல்லை என கூறிக்கொண்டிருந்த போது , கடைக்காரர் ஏற்கனவே போட்டு வைத்திருந்த டீயை ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் (Transparent Plastic Cup) கொண்டு வந்து அவரிடம், இந்தாங்க என நீட்டினார்.. நான் உடனே , இங்கு கண்ணாடி டம்ளர் ஏதும் இல்லையோ என கடைக்கு உள்ளே பார்த்தால், கண்ணாடி டம்பளர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..
அப்போது பிளாஸ்டிக் கப்பை வாங்கியவர், " என்னங்க இதுல கொடுக்கறீங்க" என கேட்கவும், நான் அந்த கடைக்காரரின் முகத்தை பார்த்தேன்.. அப்போது அதை நான் கவனிப்பதை பார்த்த அந்த கடைக்காரர், "குடிங்க, குடிங்க" என சொல்லி உள்பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டார்..
அதற்குள் பஸ் வரவே,அம்மா வா என அழைக்க பஸ்ஸில் ஏற சென்றேன்.. (அங்கு அடிக்கொருமுறை முறை பேருந்து இருந்தாலும், வீட்டில் சிறு குழந்தைகளை உடல் நலம் தேறி வரும் அப்பாவிடம் விட்டு வந்த பதட்டம் வேறு) அப்போது அவர், எனக்கு இதுலதான் தருவீங்களா என இரண்டு முறை பரிதாபமாகக் கேட்டது காதில் விழுந்தது..
நான் ஏறிய பேருந்து அக்கடையை கடக்கும்போது பார்த்தேன்.. வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.. ஒரு வார்த்தை ஏன் இப்படி செய்கிறீர்கள் என அவரை கேட்டிருக்கலாமோ என மனம் அடித்துக் கொண்டது.. இது அந்த கண்பார்வற்றவருக்கு பழக்கமாகிக் கூட போயிருக்கலாம்.. அதனால் அவர் ஒருவேளை, இந்த சம்பவத்தில் இருந்து சீக்கிரம் மனதை நிகழ் சம்பவத்துக்குள் ஐக்கியப்படுத்தி இருக்கலாம்..
நமக்கே சிறிய பிளாஸ்டிக் கப்பில் சூடாக தேநீர் அருந்தும் போது கொஞ்சம் சிரமப்படுவோம்.. அப்படி இருக்க கண்பார்வையற்றவருக்கு, இப்படி பாகுபாடு பார்த்து கொடுக்கிறாரே என்ற வருத்தம் என்னை சூழ்ந்து கொண்டது.. அவர் வழக்கமாக செல்லும் கடையையோ அல்லது வேறு கடையையோ அவருக்கு காண்பித்து இருக்கலாம் என தோன்றியது... இப்படி பட்டவர் கடையில் போய் இளநீர் குடித்தோமே என்ற சங்கடமும் என்னை வாட்டி எடுக்க, பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை என் அம்மாவிடம் புலம்பிக்கொண்டே இருந்தேன்..
இதே போல் நான் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தேநீர் குடிக்க KG பக்கம் உள்ள கடைக்கு சக தோழி ஒருவருடன் சென்றிருந்தேன்.. அப்போது பசிக்குது என வயிறைக் காட்டி, ஒருவர் காசுக்காக கை நீட்டினார்.. அவரை பார்த்தால் சிறு வயதில் இருந்தே பிச்சை எடுப்பவர் போல் தோன்றவில்லை..நன்றாக வாழ்ந்து வறுமையாலோ அல்லது ஏதேனும் பிரச்சனையாலோ வீட்டை விட்டு வந்து இங்கு சுற்றிக் கொண்டிருப்பவர் போல் தோன்றியது.. வெட்டாத முடியும், வழிக்காததால் நீண்டிருந்த தாடியும், அழுக்கேறிய அவரின் ஆடையும் அவர் அப்படி வீட்டை விட்டு வந்து நாட்களாகி இருக்கும் என உணர்த்தின..
உடனே கடைக்காரரிடம் அவருக்கும், ஒரு டீயும் போண்டாவும் கொடுக்குமாறு கூறினேன்.. உடனே காசு கேட்டு வந்தவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.. (அதை நினைக்க நினைக்க இன்னும் எனக்கு மனதில் சிறு சந்தோஷம், ஆத்ம திருப்தி வரும்.... இதுக்கே இப்படி என் மனம் சந்தோஷப்படுகிறதென்றால், பலருக்கு எண்ணற்ற உதவிகளை செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற உள்ளங்களுக்கு எவ்வளவு ஆத்ம திருப்தி கிடைக்கும்.. இது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்..)
அப்போது அக்கடைக்காரரும் இது போலவே அவருக்கும் பிளாஸ்டிக் கப்பில்தான் கொடுத்தார்.. அப்போதே இது எனக்கு நெருடியது...
அவர்கள் பார்வையில் சுகாதாரமாக தோன்றும் மனிதர்களின் எச்சில் பட்டால் அசுத்தமாகாத டம்பளர்கள் , அவர்கள் ஆளையும், உடையையும் பார்த்து ஒதுக்கும் மனிதர்களின் எச்சில் பட்டால் மட்டும் அசுத்தமாகி விடுமோ அல்லது அதை கழுவினால் கூட நோய் தோற்றும் என்ற அச்சமா இல்லையெனில் அவர்கள் குடித்த டம்ப்ளரை கழுவ அருவருப்பா?.... ஒருவேளை , அவர்களுக்கு டம்ளர்களில் குடிக்க கொடுப்பதை பார்த்தால் வேறு யாரும் டீ குடிக்க வர மாட்டார்கள் என்ற அச்சமா? (இத்தனைக்கும் அந்த கண்பார்வையற்றவர் டீசன்ட்டாகத்தான் இருந்தார்..)
எது எப்படியோ,
தீண்டாமை வழக்கம் வழக்கொழிந்து விட்டது என நாம் சொல்லிக் கொண்டிருக்கையில், பலர் இது போல ஆளை பார்த்தும், உடையை பார்த்தும் தீண்டத்தகாத காரியங்களை செய்து தீண்டாமை இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதனை சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.