பசங்க 2 - படம் நல்லா இருக்கு, பாருங்க என் சில நண்பர்கள் கூறி இருந்தனர்.. குழந்தைகள் படம்தானே , டிவி-யில் போடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம், "வந்த இரு படங்களில், இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, போய் பார்ப்போம்" என்ற கணவரின் சொல்லில் காணாமல் போயிருந்தது..
தமிழ் நாடனின்(சூர்யா) சிறு வயது அறிமுகத்திற்கு பின் , இரு குழந்தைகள் கருவாக உருவாவதிலிருந்து அக்குழந்தைகளை, அவர்களின் குடும்பம், சூழ்நிலையை சுற்றி படம் நகர்த்தப்படுகிறது.. ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் கடைசியில் வரும் காட்சிகளும் கர்ப்பிணிகளுக்கு நல்ல அறிவுறுத்தல்கள்...
பின் அந்த இரு குழந்தைகளின் சேட்டைகள் ஆரம்பிக்கும்பொழுது என் பிள்ளைகள் முன் இருக்கையை பிடித்து நின்றுகொண்டு ஆர்வமாக படம் பார்க்க துவங்கி விட்டனர்.. அதுவும் நயனா சொல்லும் கதையில் வரும் ஸ்பைடர் மேன், டோரா வந்த பிறகு , தன் ஆதர்ச கதாபாத்திரங்கள் பெரிய திரையிலும் வந்த மகிழ்ச்சியை பின்புறம் என்னை பார்த்து சிரித்து பகிர்ந்து கொண்டான் மகன்..
அதீத திறமையுள்ள இரு குழந்தைகள் இப்போதுள்ள கல்விமுறைக்கும், பள்ளி முறைக்கும் இணங்க முடியாமல் செய்யும் சேட்டைகளும் , அதனால் அவர்கள் பெறும் தண்டனைகளும், பெற்றோர்களின் திணறலும் என காட்சிகள் ரசிக்கவே வைக்கின்றன.. விருந்தினர்கள் முன் தம் பிள்ளைகளின் திறமையை வெளிச்சம் போட்டு காண்பிக்க துடிக்கும் இன்றைய பெற்றோர்களின் எண்ணத்தையும் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்..ஒருகட்டத்தில் பிள்ளைகளின் சேட்டைகளை சகிக்க முடியாமல் , அவர்களை விடுதியில் சேர்க்கும் காட்சியின்போது என்னை அறியாமலேயே கண்கள் துளிர்த்தது..
சூர்யா-அமலாபால் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும், தித்திப்பையும், ஏதோ ஒரு ஏக்கத்தையும் கொடுத்து விட்டுப் போகிறது..
வசனங்களை கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.. படம் வருவதற்கு முன்னரே பரிச்சயமாகி விட்ட இப்படத்தின், "குழந்தைகள் எப்பவும் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க , கேட்ட வார்த்தையைத்தான் பேசுவாங்க" என்ற வசனமும் சரி, "மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” என்பது போன்ற பல வசனங்களும் படத்துக்கு கூடுதல் பிளஸ்.. அதிலும் "ஒரு 70 கிலோ உருவம் ஒரு 17 கிலோ உருவத்த போட்டு அடிக்கிறது எவ்வளவு பெரிய வன்முறை இல்ல" என்ற வசனம் ஒரு குற்ற உணர்ச்சியை என்னிலிருந்து கிளப்பி விட்டது..
கடைசியில் பிள்ளைகள் மேடையில் தங்கள் திறமையை காட்டி விட்டு வந்ததும், அவர்களை வெளியில் அழைத்து வந்து , உங்களுக்குத்தான் பரிசு கிடைச்சு இருக்கு.. உங்கள் பரிசுகளை ஜட்ஜ்கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன் என சூர்யா சொல்வதும், மற்ற பிள்ளைகளும் நல்லா பண்ணினாங்க , உங்களுக்கு கிடைச்சு அவங்களுக்கு கிடைக்கலன்னா அவங்க மனசும், அவங்க பெற்றோர் மனசும் கஷ்டப்படும் இல்லையா அதுதான் என சமாதாம் கூறுவதும்தான் கொஞ்சம் என் மனதுக்கு ஏற்புடையதாக இல்லை..
பரிசு என்பதே அவர்களின் மற்றும் மற்றவர்களின் திறமையை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் என்றிருக்கும்போது, அதை மறைமுகமாக பெற்றுக்கொள்ளலாம் என்று காட்டி இருப்பதை விட, தோல்வியையும் சுலபமாக எடுத்து , வெற்றியை நோக்கி மீண்டும் முன்னேற உத்வேகம் காட்டுவது போலான காட்சிகளை இணைத்திருந்தால், இந்த நல்ல படத்தில் இதுவும் ஒரு கருத்தாக இருந்திருக்கும்..
எனினும் மொத்தமாக பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பு எடுத்துள்ளனர்... படம் முடிந்து வெளியில் வரும்போது , ஒரு படம் பார்த்த திருப்தியை விட , ஒரு பாடம் படித்த திருப்திதான் எழுந்தது..
எந்த படமாக இருந்தாலும் பார்த்து விட்டு வெளியில் வரும்போது , பிள்ளைகளிடம் "படம் பிடிச்சு இருந்துதா" என கேட்பது வழக்கம்.. இந்த முறை மகனாகவே முன்வந்து , "படம் நல்லா இருக்கும்மா" எனக் கூறினான்..
"உனக்கு அதுல யாரை பிடித்தது"எனக் கேட்டேன், "டாக்டர்" என கூறினான்....
தமிழ் நாடனின்(சூர்யா) சிறு வயது அறிமுகத்திற்கு பின் , இரு குழந்தைகள் கருவாக உருவாவதிலிருந்து அக்குழந்தைகளை, அவர்களின் குடும்பம், சூழ்நிலையை சுற்றி படம் நகர்த்தப்படுகிறது.. ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் கடைசியில் வரும் காட்சிகளும் கர்ப்பிணிகளுக்கு நல்ல அறிவுறுத்தல்கள்...
பின் அந்த இரு குழந்தைகளின் சேட்டைகள் ஆரம்பிக்கும்பொழுது என் பிள்ளைகள் முன் இருக்கையை பிடித்து நின்றுகொண்டு ஆர்வமாக படம் பார்க்க துவங்கி விட்டனர்.. அதுவும் நயனா சொல்லும் கதையில் வரும் ஸ்பைடர் மேன், டோரா வந்த பிறகு , தன் ஆதர்ச கதாபாத்திரங்கள் பெரிய திரையிலும் வந்த மகிழ்ச்சியை பின்புறம் என்னை பார்த்து சிரித்து பகிர்ந்து கொண்டான் மகன்..
அதீத திறமையுள்ள இரு குழந்தைகள் இப்போதுள்ள கல்விமுறைக்கும், பள்ளி முறைக்கும் இணங்க முடியாமல் செய்யும் சேட்டைகளும் , அதனால் அவர்கள் பெறும் தண்டனைகளும், பெற்றோர்களின் திணறலும் என காட்சிகள் ரசிக்கவே வைக்கின்றன.. விருந்தினர்கள் முன் தம் பிள்ளைகளின் திறமையை வெளிச்சம் போட்டு காண்பிக்க துடிக்கும் இன்றைய பெற்றோர்களின் எண்ணத்தையும் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்..ஒருகட்டத்தில் பிள்ளைகளின் சேட்டைகளை சகிக்க முடியாமல் , அவர்களை விடுதியில் சேர்க்கும் காட்சியின்போது என்னை அறியாமலேயே கண்கள் துளிர்த்தது..
சூர்யா-அமலாபால் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும், தித்திப்பையும், ஏதோ ஒரு ஏக்கத்தையும் கொடுத்து விட்டுப் போகிறது..
வசனங்களை கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.. படம் வருவதற்கு முன்னரே பரிச்சயமாகி விட்ட இப்படத்தின், "குழந்தைகள் எப்பவும் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க , கேட்ட வார்த்தையைத்தான் பேசுவாங்க" என்ற வசனமும் சரி, "மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” என்பது போன்ற பல வசனங்களும் படத்துக்கு கூடுதல் பிளஸ்.. அதிலும் "ஒரு 70 கிலோ உருவம் ஒரு 17 கிலோ உருவத்த போட்டு அடிக்கிறது எவ்வளவு பெரிய வன்முறை இல்ல" என்ற வசனம் ஒரு குற்ற உணர்ச்சியை என்னிலிருந்து கிளப்பி விட்டது..
கடைசியில் பிள்ளைகள் மேடையில் தங்கள் திறமையை காட்டி விட்டு வந்ததும், அவர்களை வெளியில் அழைத்து வந்து , உங்களுக்குத்தான் பரிசு கிடைச்சு இருக்கு.. உங்கள் பரிசுகளை ஜட்ஜ்கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன் என சூர்யா சொல்வதும், மற்ற பிள்ளைகளும் நல்லா பண்ணினாங்க , உங்களுக்கு கிடைச்சு அவங்களுக்கு கிடைக்கலன்னா அவங்க மனசும், அவங்க பெற்றோர் மனசும் கஷ்டப்படும் இல்லையா அதுதான் என சமாதாம் கூறுவதும்தான் கொஞ்சம் என் மனதுக்கு ஏற்புடையதாக இல்லை..
பரிசு என்பதே அவர்களின் மற்றும் மற்றவர்களின் திறமையை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் என்றிருக்கும்போது, அதை மறைமுகமாக பெற்றுக்கொள்ளலாம் என்று காட்டி இருப்பதை விட, தோல்வியையும் சுலபமாக எடுத்து , வெற்றியை நோக்கி மீண்டும் முன்னேற உத்வேகம் காட்டுவது போலான காட்சிகளை இணைத்திருந்தால், இந்த நல்ல படத்தில் இதுவும் ஒரு கருத்தாக இருந்திருக்கும்..
எனினும் மொத்தமாக பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பு எடுத்துள்ளனர்... படம் முடிந்து வெளியில் வரும்போது , ஒரு படம் பார்த்த திருப்தியை விட , ஒரு பாடம் படித்த திருப்திதான் எழுந்தது..
எந்த படமாக இருந்தாலும் பார்த்து விட்டு வெளியில் வரும்போது , பிள்ளைகளிடம் "படம் பிடிச்சு இருந்துதா" என கேட்பது வழக்கம்.. இந்த முறை மகனாகவே முன்வந்து , "படம் நல்லா இருக்கும்மா" எனக் கூறினான்..
"உனக்கு அதுல யாரை பிடித்தது"எனக் கேட்டேன், "டாக்டர்" என கூறினான்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.