செவ்வாய், 15 டிசம்பர், 2015

4

சப்பாத்திக்கு மாவு பிசஞ்சுட்டு இருக்கும்போதே பையன் பக்கத்துல வந்து , "அம்மம்மா வீட்லயும்,அம்மம்மா இதை பால்(Ball ) மாதிரி செஞ்சு போடுமா , நான் அதை எடுத்து சாப்பிடுவேன்"எனக் கொஞ்சி சொல்லிக்கொண்டே அதில் கையை விட போனான்.. உடனே அவனை தடுத்து , "இதை இப்படியே சாப்பிட்டா வயிறு வலிக்கும், அம்மா சப்பாத்தி போட்டு தர்றேன் , அப்போ சாப்பிடு" என சொல்லியும் அங்கேயே சுற்றி கொண்டு இருந்தான்..
பாத்திரத்துக்குள் கையை விட போவதும் , நான் திட்டியதும் எடுப்பதுமென செய்கை தொடர்ந்து கொண்டே இருந்தது..
சீக்கிரம் பால்(Ball ) மாதிரி பிடிம்மா, என்று சொல்லிக்கொண்டே இருந்தவன் நான் உருண்டை பிடித்து வைத்து , தேய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நான் கவனிக்காத நேரத்தில் சிறு பகுதியை எடுத்துக் கொண்டு வெற்றிக் களிப்போடு "அனிஸ்ரீயா, நான் எடுத்துட்டேன்" என சிரித்துக் கொண்டே ஹாலுக்கு ஓடினான்.. "இனி இங்க வந்து பாரு"என திட்டி விட்டு வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்..
உடனே அடுத்தவள் நானே அறியாதவாறு ஆட்டத்துக்குள் நுழைந்தாள்.. அம்மா தண்ணி வேணும் என அருகில் வந்தவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க நான் எழுந்த போது, அவளும் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு "அண்ணா நானும் எடுத்துட்டேன்" என ஓடினாள்.. குரலில் அவ்வளவு துள்ளல்....
"இனி 2 பேரும் இங்க வந்து பாருங்க, மாவை அப்படியே தின்னக்கூடாதுன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா" என சத்தம் போட்டுக்கொண்டே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்..
திரும்ப மெல்ல பயந்து கொண்டே மாவை எடுப்பதற்காக நான் கவனிக்கிறேனா என நோட்டம் விட்டு மெல்ல வந்து கொண்டிருந்தான்..
இப்போது திடீரென ஒரு எண்ணம் எனக்கு தோன்றியது..
நானும், என் தங்கச்சியும் ரொம்ப சின்ன பசங்களா இருக்கும்போது என் அம்மா சப்பாத்திக்கு மாவு தேய்ச்சுட்டு இருப்பாங்க.. மாவை அப்படியே சாப்பிடக்கூடாதுன்னு அம்மா மாவுக்கு காவல் இருந்துட்டே , சப்பாத்தியும் தேய்ச்சுட்டு , எங்களையும் கவனிச்சுட்டே இருப்பாங்க.. அப்போ , அம்மா கவனிக்காத நேரம் பார்த்து , நானும் என் தங்கையும் போட்டி போட்டுட்டு, மாவை கொஞ்சம் பிச்சுட்டு வந்து சாப்பிடுவோம் பாருங்க...... ப்ச்.... அது ஒரு பசுமையான காலம்ங்க... அது இனியெல்லாம் வராது.....
-
-
-
-
-
-
-
-
-
இப்படி ஒரு பதிவு பின்னாளில் ரோஹித் ரெஜிகுமாரால் முகநூலில் போடப்படலாம்..
அதனால் அவங்களை சும்மா மிரட்டற மாதிரி மிரட்டிட்டு மாவு எடுக்க போகும் போது கவனிக்காத மாதிரி விட்டுட்டு இருந்தேன்..
முகநூலில் பின்னால் வரப்போற ஒரு பதிவை கெடுத்த பாவம் நமக்கெதுக்குங்க tongue emoticon grin emoticon grin emoticon grin emoticon .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.