முட்டாள்தனமாகபார்க்கப்படும்
என் செய்கைக்காக
பரிதாபத்தையும் ஆதங்கத்தையும்
கலந்த வார்த்தைகளை
என் மீது வீசாதீர்கள்...!!!!
அந்த செய்கையின் நினைவுகள்
எழுப்பப்படும் போதெல்லாம்
உங்களை விட மிக சிறப்பாகவே
அதை செய்து கொண்டிருக்கிறது
என் மனம் ....!!!!!
--------xxxxxx-----------
வழக்கமான புன்னகை
தவிர்க்கப்படும்போதோ பழக்கமான பார்வை
திசைமாறும்போதோ
காரணம் தேடி
வரையறுக்க இயலா
பல காரணங்களுக்குள்
சிக்கித் தவிக்கிறது மனது...
--------xxxxxxx-------------
நிஐங்களோடு தர்க்கம் செய்து
ஓய்ந்த மனம்
பின் அதன் நினைவுகளோடு கூட
தர்க்கம் செய்ய முனைவதில்லை.
-------xxxxxxxx-------
நடுசாமத்தில் கேட்கும்
கூர்க்காவின் விசில் சத்தம்
தூக்கத்தில் இல்லாதோர்க்கு
தம் பணி குறித்து நினைவூட்டும்
அலாரம் ஒலியா
திருடர்களுக்கு விடுக்கும்
எச்சரிக்கை ஒலியா
குழப்பத்திலேயே மனது...!!!
--------------xxxxxxxxxxxxxxxx---------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.