செவ்வாய், 15 டிசம்பர், 2015

மனம்




உங்களால் 
முட்டாள்தனமாகபார்க்கப்படும்
என் செய்கைக்காக
பரிதாபத்தையும் ஆதங்கத்தையும்
கலந்த வார்த்தைகளை
என் மீது வீசாதீர்கள்...!!!!


அந்த செய்கையின்
நினைவுகள்
எழுப்பப்படும் போதெல்லாம்
உங்களை விட 
மிக சிறப்பாகவே
அதை செய்து கொண்டிருக்கிறது
என் மனம் ....!!!!!


--------xxxxxx-----------



வழக்கமான புன்னகை
தவிர்க்கப்படும்போதோ
பழக்கமான பார்வை
திசைமாறும்போதோ
காரணம் தேடி
வரையறுக்க இயலா
பல காரணங்களுக்குள்
சிக்கித் தவிக்கிறது மனது...

--------xxxxxxx-------------

நிஐங்களோடு தர்க்கம் செய்து ஓய்ந்த மனம் பின் அதன் நினைவுகளோடு கூட தர்க்கம் செய்ய முனைவதில்லை.


-------xxxxxxxx-------

நடுசாமத்தில் கேட்கும் கூர்க்காவின் விசில் சத்தம் தூக்கத்தில் இல்லாதோர்க்கு தம் பணி குறித்து நினைவூட்டும் அலாரம் ஒலியா திருடர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒலியா குழப்பத்திலேயே மனது...!!!

--------------xxxxxxxxxxxxxxxx---------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.