செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஆழ்மனம்

துயில போகும் நேரத்தில் 
மின்னலிடும் பல வர்ண 
நினைவுகளின் சாயங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்துக் கொண்டிருக்கிறது அது...!!!

அதனூடே வேறு சில
தான் விரும்பிய
நிறங்களையும் சேர்த்து
அவையனத்தின்
சேர்க்கையை திட்டமிட்டு
உறக்கத்துக்காக காத்திருக்கிறது...!!!

உறக்கம் உள்நுழைந்ததும்
அதன் துணையுடன்
எவரிடமும் உள்ளது உள்ளபடி
காட்ட இயலாத
"கனவு" என்னும்
அற்புத ஓவியத்தை
படைக்க ஆரம்பிக்கிறது...!!!!

உறக்கம் உறங்க போகும்
சூழல் தெரியும் போது
ஓவியத்தின் சில நிறத்திட்டுக்களை
மட்டும் உதிர்த்து விட்டு
உறக்கத்துடனேயே
சலனமில்லாமல் நகர்கிறது
அது என்ற

"ஆழ்மனம்"....!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.