செவ்வாய், 15 டிசம்பர், 2015

3

அடுப்பில் சப்பாத்தி போட்டுக்கொண்டிருக்கும்போது நிகிதா(மகள்) அங்கு வந்து , "அம்மா அங்க வாம்மா " என டிவி-யில் எதையோ காட்ட நொடிக்கொருதரம் அழைத்துக் கொண்டிருந்தாள்..
"இதோ, இந்த சப்பாத்தியை பாத்திரத்துல வச்சுருக்கேன்ல , அதை மூடி வச்சுட்டு வர்றேன்" என தட்டை எடுத்து மூடி வைப்பதை பார்த்தவள் , " அம்மா அது மூடி இல்லம்மா, தட்டு" எனக்கூறினாள்... புரிந்ததும் மெல்ல வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு " தட்டுதான், ஆனால் இதை மூடி வைக்கிறோம்ல, அதான் சொன்னேன்" என புரிய வைக்க போராட, "போம்மா, உனக்கு ஒண்ணுமே தெரியல" என சொன்னவளிடம், திரும்ப விளக்க முயற்சிக்க, திரும்பவும் அவள் அதையே கூறிவிட்டு, என் மறுவிளக்கத்தை எதிர்பார்க்காமல் "அங்க வா " எனக்கூறிக்கொண்டே ஹாலுக்கு திரும்பினாள்.. "நான் சரியாதானே பேசறேன்" என சங்கிலி முருகன் அவர்கள் ஒரு படத்தில் கூறும் குழப்ப மனநிலையுடன் பின்தொடர்ந்தேன்..
இதே போல் ஒரு வாரத்திற்கு முன்பு, டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது , ஒளிபரப்பப்பட்ட ஹேர் ஆயில் விளம்பரத்தை பார்த்து விட்டு, "பார்த்தியா , அமம்மாவுக்கும் நிறைய முடி கொட்டிட்டே இருக்கு , இனி அம்மாவும் இததான் வாங்கி பார்க்கணும்" என பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்..
"ஆமாம்மா, அம்மாவுக்கு நிறைய முடி விழுந்துருச்சு" என என் முடியை தடவிக்கொண்டே ரோஹித் சொல்ல , உடனே நிகிதா, "அம்மா , எனக்கும் நிறைய முடி விழுகுதும்மா" என்று சொல்ல அவள் விழுவதாக கூறிய முடியை பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்க சில நிமிடங்கள் ஆனது..
அதாவது தன் நெற்றியில் புரண்டு விழும் முடியை முன்புறம் குனிந்தவாறே தொட்டு காண்பித்து, "இதோ எனக்கும் முடி விழுது" என சோகத்துடன் கூறிக்கொண்டிருந்தாள் grin emoticon grin emoticon grin emoticon grin emoticon ....
சின்ன பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இப்படி அடிக்கொருதரம் ரசிக்க வைக்கும் நிகழ்வுகள்.. ரசித்துக்கொண்டே , சேமித்துக்கொண்டும் இருக்கிறேன் அந்த நினைவுகளை smile emoticon ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.