"ஆடு பகை , குட்டி உறவா?"இது வெறும் வாக்கியமாக மட்டும் இல்லாமல் நம்மில் பலரின் செயலாகவும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது..
சின்ன குழாயடி சண்டை முதல் பெரிய சொத்து பிரச்சனை வரை என பெரியவர்களுக்குள் வரும் பிரச்சனைகளால் அந்த இல்லங்களில் உள்ள விவரம் புரிந்து கொள்ள முடியாத சிறுவர்களும் முன்பிருந்த உறவுகளிலிருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர்...
இது போல பெரியவர்களுக்குள் எழுந்த மனப் பிரச்சனைகளால் ஒரு குடும்பம் போல உறவாடிய, நாங்கள் தூக்கி வளர்த்த சிறுவர்கள் (5 வயது முதல் ) நாம் ஆசையாக கூப்பிட்டு நலம் விசாரிக்கும்போது எடுத்தெறிந்து பேசி சென்றதை கேட்டு, இவனுக்கு நடந்தது என்னன்னு தெரியுமா, நாம என்ன தப்பு செஞ்சோம்னு இந்த பையன் இப்படி பேசிட்டு போரான்மா என என் அம்மாவிடம் வருத்தப்பட்ட காலங்கள் உண்டு.. அந்த குழந்தைகள் எங்கள் வீடு தாண்டி அடுத்த வீட்டுக்கு செல்லும்போது மனம் வலிக்கும்... அவங்க வீட்ல பேச கூடாது, போக கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க, பிள்ளைக என்ன செய்யும் என சமாதானப் படுத்துவார்......
இப்போது என் பெற்றோர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டதை நினைத்துப் பார்க்கும்போது அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. (என் பெற்றோர்
என்பதற்காக நான் இதை கூறவில்லை) அவர்கள் மனவருத்தம் அடைந்து பேசாமல் இருந்த சிலரிடமும் , இவர்களை சில காரணங்களினாலும் , காரணமே இல்லாமலும் ஒதுக்கி வைத்திருக்கும் சிலரிடமும் நாங்கள் பழகக் கூடாது என தடை போட்டதில்லை.. இதன் பலன் என்னவெனில் , இப்படி பேசாமல் இருந்த உறவுகள், நண்பர்கள் எல்லாம் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பழையது மறந்து அழைத்துக் கொள்வர். அதே போல் துக்க காரியங்களுக்கு முன்னால் வந்து நிற்பர்...
புகைப்படங்களை பிள்ளைகளுக்கு காட்டிக் கொண்டிருக்கும்போது எனக்கு மனவருத்தம் உண்டாக்கியவர்களோ , உதாசீனப்படுத்தியவர்களோ அதில் ஏதேனும் இடத்தில் தென்படும்போது (அவர்களை முடிந்தவரை நேரில் பார்ப்பதை தவிர்ப்பேன்..நேரில் பார்க்க நேரும்போது குறைந்தது சிரித்து விட்டாவது செல்வேன், சிலரை பார்க்காதது போல் சென்றிருந்தால் அவர்கள் அதற்கு முன் என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களாக இருப்பர், இம்முறை நாம் பார்த்து திரும்பவும் அவர் அவ்வாறு செய்தால் மன சஞ்சலம் உண்டாகுமே என தவிர்த்திருப்பேன்.. ) உடனே என் பிள்ளை (அவன் அறிந்தவர்களை)சந்தோஷமாக அவர்களை சுட்டிக்காட்டி குதூகலப்படுவான்.. அப்போது நம்மை வெறுத்தவர்கள் மேல் நம் மகன் இவ்வளவு பாசமாக இருக்கிறானே என்று மனம் சஞ்சலப்படும்தான்... ஆனால் நம்மை பிடிக்காதவர்களுக்கு நம் பிள்ளைகளையும் பிடிக்காது என எவ்வாறு நினைக்க முடியும் என்று சஞ்சலத்தை மாற்றிக் கொள்வேன்... என் பிள்ளைகள், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்த கெட்டவர்களிடம் மட்டும் அவர்கள் பேசாமல் இருக்கட்டும் என்ற மனப்பக்குவத்தை வரவழைத்துக்கொண்டேன்... (இதுவே தீய நடத்தை உள்ளவர்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலக்கியே வைப்பேன்)
பிள்ளைகளுக்கும் நல்லவர் யார், கெட்டவர் யார் என அறிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது அவர்களாகவே அறிந்து கொள்வர்... அந்த அனுபவம்தான் அவர்களுக்கு நல்லது எது தீயது எது என கற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கொடுக்கும்.. அதை விடுத்து, நமக்கு ஆகாதவர்கள் தீயவர்கள் என சொல்லிக் கொடுத்து வளர்ப்பது, பிறரை வெறுத்தல் எனும் நஞ்சை ஊற்றி வளர்ப்பதற்கு சமம்...
சின்ன குழாயடி சண்டை முதல் பெரிய சொத்து பிரச்சனை வரை என பெரியவர்களுக்குள் வரும் பிரச்சனைகளால் அந்த இல்லங்களில் உள்ள விவரம் புரிந்து கொள்ள முடியாத சிறுவர்களும் முன்பிருந்த உறவுகளிலிருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர்...
இது போல பெரியவர்களுக்குள் எழுந்த மனப் பிரச்சனைகளால் ஒரு குடும்பம் போல உறவாடிய, நாங்கள் தூக்கி வளர்த்த சிறுவர்கள் (5 வயது முதல் ) நாம் ஆசையாக கூப்பிட்டு நலம் விசாரிக்கும்போது எடுத்தெறிந்து பேசி சென்றதை கேட்டு, இவனுக்கு நடந்தது என்னன்னு தெரியுமா, நாம என்ன தப்பு செஞ்சோம்னு இந்த பையன் இப்படி பேசிட்டு போரான்மா என என் அம்மாவிடம் வருத்தப்பட்ட காலங்கள் உண்டு.. அந்த குழந்தைகள் எங்கள் வீடு தாண்டி அடுத்த வீட்டுக்கு செல்லும்போது மனம் வலிக்கும்... அவங்க வீட்ல பேச கூடாது, போக கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க, பிள்ளைக என்ன செய்யும் என சமாதானப் படுத்துவார்......
இப்போது என் பெற்றோர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டதை நினைத்துப் பார்க்கும்போது அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. (என் பெற்றோர்
என்பதற்காக நான் இதை கூறவில்லை) அவர்கள் மனவருத்தம் அடைந்து பேசாமல் இருந்த சிலரிடமும் , இவர்களை சில காரணங்களினாலும் , காரணமே இல்லாமலும் ஒதுக்கி வைத்திருக்கும் சிலரிடமும் நாங்கள் பழகக் கூடாது என தடை போட்டதில்லை.. இதன் பலன் என்னவெனில் , இப்படி பேசாமல் இருந்த உறவுகள், நண்பர்கள் எல்லாம் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பழையது மறந்து அழைத்துக் கொள்வர். அதே போல் துக்க காரியங்களுக்கு முன்னால் வந்து நிற்பர்...
புகைப்படங்களை பிள்ளைகளுக்கு காட்டிக் கொண்டிருக்கும்போது எனக்கு மனவருத்தம் உண்டாக்கியவர்களோ , உதாசீனப்படுத்தியவர்களோ அதில் ஏதேனும் இடத்தில் தென்படும்போது (அவர்களை முடிந்தவரை நேரில் பார்ப்பதை தவிர்ப்பேன்..நேரில் பார்க்க நேரும்போது குறைந்தது சிரித்து விட்டாவது செல்வேன், சிலரை பார்க்காதது போல் சென்றிருந்தால் அவர்கள் அதற்கு முன் என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களாக இருப்பர், இம்முறை நாம் பார்த்து திரும்பவும் அவர் அவ்வாறு செய்தால் மன சஞ்சலம் உண்டாகுமே என தவிர்த்திருப்பேன்.. ) உடனே என் பிள்ளை (அவன் அறிந்தவர்களை)சந்தோஷமாக அவர்களை சுட்டிக்காட்டி குதூகலப்படுவான்.. அப்போது நம்மை வெறுத்தவர்கள் மேல் நம் மகன் இவ்வளவு பாசமாக இருக்கிறானே என்று மனம் சஞ்சலப்படும்தான்... ஆனால் நம்மை பிடிக்காதவர்களுக்கு நம் பிள்ளைகளையும் பிடிக்காது என எவ்வாறு நினைக்க முடியும் என்று சஞ்சலத்தை மாற்றிக் கொள்வேன்... என் பிள்ளைகள், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்த கெட்டவர்களிடம் மட்டும் அவர்கள் பேசாமல் இருக்கட்டும் என்ற மனப்பக்குவத்தை வரவழைத்துக்கொண்டேன்... (இதுவே தீய நடத்தை உள்ளவர்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலக்கியே வைப்பேன்)
பிள்ளைகளுக்கும் நல்லவர் யார், கெட்டவர் யார் என அறிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது அவர்களாகவே அறிந்து கொள்வர்... அந்த அனுபவம்தான் அவர்களுக்கு நல்லது எது தீயது எது என கற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கொடுக்கும்.. அதை விடுத்து, நமக்கு ஆகாதவர்கள் தீயவர்கள் என சொல்லிக் கொடுத்து வளர்ப்பது, பிறரை வெறுத்தல் எனும் நஞ்சை ஊற்றி வளர்ப்பதற்கு சமம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.