செவ்வாய், 15 டிசம்பர், 2015

இரவு

இரவின் நிசப்தத்துக்கு 
எதிராக சீரான ஒலியைக் 
கொடுத்து சுழன்று 
கொண்டிருக்கிறது 
மின்விசிறி....!!!!

அறை முழுவதும் பரவி
மேனியை சில்லென
வருடுகிறது அது தரும்
குளிர் காற்று....!!!!

மின்விசிறியின் சத்தத்துக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
தோற்றுக் கொண்டிருக்கிறது
எங்களின் மெல்லிய
மூச்சொலி....!!!!

சாளரத்தின்
திரைச்சீலையையும் மீறி
ஒளியை உள் அனுப்பிக்
கொண்டிருக்கிறது
அம்புலி....!!!!

என்னைத்தவிர அனைவரும்
கனவில் வாழ்ந்து கொண்டிருக்க
அறையில் தெரியும்
ஒவ்வொன்றுடனும் உறவாடிக் கொண்டிருக்கிறது
என் நினைவு....!!!!

இவை எல்லாவற்றையும்
மௌனமாக
தன் பார்வையால்
விழுங்கிக் கொண்டிருக்கிறது
இரவு....!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.